NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
    காசாவில் இதுவரை 9,200க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 05, 2023
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    ஒரு மாதத்திற்கு முன், இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால், 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் 4 வாரங்களாக பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதலில் 9500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்படும் வன்முறைகள் குறித்த உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பினரும் செய்யும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து வருவதாக ஐநா சபை கூறியுள்ளது.

    பின்வ்ர்கள்

    போரை கட்டுப்படுத்தும் சர்வேதேச சட்டங்கள் என்ன கூறுகின்றன?

    போருக்கான விதிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்களின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதில் ஐநா சாசனமும் அடங்கும்.

    ஐநா சாசனம், ஆக்கிரமிப்புப் போர்களை மொத்தமாக தடைசெய்கிறது. எனினும், நாடுகளுக்கு தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்றும் இந்த சாசனம் கூறுகிறது.

    போர்க்கள தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின் வரையப்பட்ட ஜெனீவா உடன்படிக்கைகள் உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை கிட்டத்தட்ட எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும்.

    1949இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு சர்வதேச சட்டங்கள், போர்க்காலங்களில் பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன.

    மேலும், சர்வதேச ஒப்பந்தங்கள் இரசாயன/உயிரியல் ஆயுதங்கள் போன்ற சில ஆயுத வகைகளை தடை செய்கின்றன.

    பிஜிகேவ்கிய

    ஹமாஸ் போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறதா?

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் போராளிக்குழு 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது வீசியது.

    அது மட்டுமல்லாமல், இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவிய நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் கிட்டத்தட்ட 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொடூரமாக கொன்றனர்.

    இந்த தாக்குதலின் போது, குறைந்தது 1,400 பேர் இறந்ததாகவும், 240க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் சுமார் 5,400 பேர் காயமடைந்துள்ளனர்.

    பொதுமக்களை படுகொலை செய்தது, அப்பாவிகளை பிணையக்கைதிகளாக கொண்டு சென்றது ஆகிய அனைத்தும் போர்க்குற்றங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

    பொதுமக்களை ஒருபோதும் பணயக்கைதிகளாக பிடிக்கக்கூடாது. அப்படி செய்தால், அது போர்க்குற்றமாக வகைப்படுத்தப்படும்.

    ட்ஜ்வ்ன்ல்க்

    இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் சட்டபூர்வமானதா?

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளை மொத்தமாக அளிக்க போகிறோம் என்று கூறிய இஸ்ரேல், ஒரு மாதமாக தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் வாழும் காசா பகுதி மீது வான் மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகிய அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் இஸ்ரேல் தடை விதித்தது.

    காசாவில் இதுவரை 9,200க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    மேலும், 23,000க்கும் அதிகமானோர் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் காயமடைந்துள்ளனர்.

    அது போக, அகதிகள் முகாம், மருத்துவமனை போன்ற பொதுமக்கள் தஞ்சம் அடைந்த பகுதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இவைகள் எல்லாம் மனித மீறல்களாகும்.

    தவ்

    சர்வதேச சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா?

    தற்போதைய மோதலில் "அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வருவதாக" ஐ.நா விசாரணை ஆணையம் கூறியுள்ளது.

    பாலஸ்தீனப் பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்தும் விசாரணையில் அந்த ஆதாரம் சமர்பிக்கப்படலாம்.

    சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளின் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவும் நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ஐசிசி) அதிகாரம் உள்ளது.

    ஆனால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உட்பட சில நாடுகள் அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை.

    மேலும், ICCக்கு கைது வாரண்ட்களை நிறைவேற்றும் போலீஸ் படை எதுவும் இல்லை.

    எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தணடனைகளில் இருந்து பெரும் தலைவர்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சட்டம் பேசுவோம்
    உலகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இஸ்ரேல்

    காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா ஐநா சபை
    காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி  பாலஸ்தீனம்
    காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் ஹமாஸ்
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்
    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல் இஸ்ரேல்
    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை ஐநா சபை

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    உலகம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்
    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்  சீனா
    பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது? பொருளாதாரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025