NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
    அக்டோபர்7க்கு பின், அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் சர்வதேச கப்பல்கள் தாக்கப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது.

    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 12, 2023
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், வர்த்தக எண்ணெய் கப்பல் சேதமடைந்ததாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

    பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் (111 கிமீ) தொலைவில், 'ஸ்ட்ரின்டா' கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலான யுஎஸ்எஸ் மேசன் அங்கு வந்து, எண்ணெய் கப்பலுக்கு உதவியதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

    கடந்த சனிக்கிழமை அன்று, இஸ்ரேலுக்கு பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் எனவும், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இஸ்ரேலுடன் தொடர்பு வைக்கக் கூடாது எனவும், ஹூதி போராளிகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையில் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் ஆதரவு அமைப்புகள்

    இருப்பினும் ஸ்ட்ரின்டா எண்ணெய் டேங்கர் கப்பல், இஸ்ரேலுடன் தொடர்புடையதா அல்லது அந்நாட்டு துறைமுகங்களுக்கு சென்றதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    ஹூதி போராளிகள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகளை குறிவைத்து வரும், ஈரானுடன் ஆதரவு "எக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ்" அமைப்பில் உள்ள பல குழுக்களுள் ஹூதிகளும் ஒன்றாகும்.

    டிசம்பர் முதல் வாரத்தில், சர்வதேச கடல் பகுதியில் 3 கப்பல்கள் ஹூதி குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

    மேலும் கடந்த மாதம் பிரிட்டிஷுக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாக கூறி, ஹூதி போராளிகள் கடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    வெப்பத்தைத் தணிக்க வருகிறது மழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? "No" சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு ஆன்லைன் வணிகம்
    கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கி சூடு

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்

    அமெரிக்கா

    'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு  இந்தியா
    400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது? இந்தியா
    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது ஜப்பான்
    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா இந்தியா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு  ஒருநாள் உலகக்கோப்பை
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025