NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

    எழுதியவர் Srinath r
    Dec 21, 2023
    10:27 am

    செய்தி முன்னோட்டம்

    போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

    பாதுகாப்பு படைகளில் பாலின சமத்துவத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டது.

    இந்த ஆண்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு விடுப்புக்கான விதிகளை ராணுவத்தில் உள்ள பெண் ராணுவ வீரர்களைப் போல,

    மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு இணையாக நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார்

    அது மட்டுமின்றி ஆயிரம் பெண் அக்னி வீரர்கள், இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ராணுவத்தில் வரலாறு படைத்த 10 பெண்கள் பற்றிய தொகுப்பு.

    2nd card

    இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்

    கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரியாக, இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கினார்.

    இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை டிசம்பர் மாதம் ட்விட்டரில் இதை வெளியிடப்பட்டது. அவர் தற்போது ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் முதல் லெப்டினன்டாக உள்ளார்.

    குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, முன்னணி போர்ப் பிரிவுக்கு பொறுப்பேற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி ஆனார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விமானப்படையின் பறக்கும் பிரிவின், முதல் பெண் விமானத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    கேலண்ட்ரி விருது வென்ற வென்ற முதல் பெண்

    விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, இந்திய விமானப்படையில் கேலண்ட்ரி விருது வென்ற முதல் பெண் ஆனார்.

    2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 47 உயிர்களை காப்பாற்றியதற்காக, இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    கேப்டன் சிவ சவுகான் சியாச்சின் போர் பள்ளியில் தேர்ச்சி பெற்ற பின்னர், உலகிலேயே மிக உயரமான சியாச்சின் போர் முனையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆனார்.

    ஜனவரி மாதம் முதல் இங்கு பதவியில் இருக்கும் அவர், அவரின் குழுவுடன் இணைந்து, பல தீவிரவாத செயல்களை தடுத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    4th card

    பீரங்கி படையில் "ஐந்து பெண் அதிகாரிகள்"

    வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், பீரங்கி படையில் "ஐந்து பெண் அதிகாரிகள்" இந்திய ராணுவத்தால் ஏப்ரல் மாதம் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

    லெப்டினன்ட் மெஹக் சைனி, லெப்டினன்ட் சாக்ஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் பயஸ் முட்கில் மற்றும் லெப்டினன்ட் அகன்ஷா ஆகியோர் அந்த ஐந்து அதிகாரிகள் ஆவர்.

    இந்த ஆண்டு நவம்பர் மாதம், மருத்துவர் சுனிதா ராணுவ மருத்துவமனைகளில் உள்ள ரத்த மாற்று மையத்திற்கு தலைமை ஏற்ற முதல் பெண் அதிகாரியானார்.

    டெல்லியில் உள்ள மிகப்பெரிய ராணுவ ரத்தமாற்று மையத்திற்கு இவர் தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

    5th card

    எல்லைச் சாலைகள் சார்பில் வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் 

    117 பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியான கேப்டன் சுர்பி ஜக்மோலா, பூட்டானில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் திட்டமான டண்டக்கில் நியமிக்கப்பட்டார்.

    எல்லைச் சாலைகள் அமைப்பில் (BRO), வெளிநாட்டுப் பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி இவர் ஆவார்.

    மிசோரம் ஆளுநரின் உதவியாளர்-டி-கேம்பாக (ADC) ஸ்க்வாட்ரான் லீடர் மனிஷா பதி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கவர்னரின் உதவியாளர்-டி-கேம்பாக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    6th card

    சுயாதீன களப் பட்டறையின் தலைமை பொறுப்பேற்ற முதல் பெண்

    இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை மையத்தின் சப்ளை செயின் பராமரிப்புக்கு, தகவல் தொடர்பு மண்டல மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பட்டாலியன் பொறுப்புக்கு முதல் பெண் அதிகாரியாக கர்னல் சுசிதா சேகர் நியமிக்கப்பட்டார்.

    கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியர்களின் கர்னல் கீதா ராணா, கிழக்கு லடாக்கில் உள்ள ஒரு சுயாதீன களப் பட்டறையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் அதிகாரி ஆனார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியா
    போர்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்திய ராணுவம்

    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள் இந்தியா
    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா

    இந்தியா

    மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ கிரிக்கெட்
    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு சாம்சங்
    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி அமித்ஷா
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    நரேந்திர மோடி

    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா இந்தியா
    ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025