NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?
    41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    அதிநவீன ட்ரில்லிங் இயந்திரங்கள் தொடர்ந்து பழுதடைந்ததை அடுத்து, எலி-துளை சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    ஜார்கண்டை சேர்ந்த 15 பேர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 8 பேர், பீகார் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஐந்து பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர், அசாம் மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த தலா இரண்டு பேர், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் 17 நாட்களாக உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கி இருந்தனர்.

    ட்ஜ்வ்க்க்

    சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் பின்னணி

    4.5 கிமீ நீளம் கொண்ட சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர்-12அன்று இடிந்து விழுந்தது.

    அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சார் தாம் யாத்திரை பாதையின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது.

    கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு முக்கிய இந்துத் தலங்களை இணைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டு வரும் இருவழிப்பாதை தான் இந்த சார் தாம் யாத்திரை பாதை.

    இது 1.5 பில்லியன் டாலர் செலவில் இமயமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் 890 கிலோமீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாகும்.

    கஜிவாஜிக்

    சில்க்யாரா சுரங்கப்பாதை எதனால் இடிந்து விழுந்தது?

    ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் கட்டுமானங்களை கட்டுவது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

    இமயமலை பகுதிகளில் நடந்து வரும் வேகமான வளர்ச்சி காலநிலை மாற்றத்தை பரவலாக தூண்டி உள்ளூர் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக நடந்து வரும் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர்மின்சார மேம்பாடு மற்றும் முறையான வடிகால் அமைப்பு இல்லாதது ஆகியவை இந்த பெரும் நெருக்கடிக்கு இட்டுச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரம் மூழ்கியது, இமாச்சலில் ஏற்பட்ட வெள்ளம், சிக்கிமில் பனிப்பாறை ஏரி வெடித்தது மற்றும் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஆகியவை மேற்கூறிய காரணங்களால் இந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளாகும்.

    போரியூ

    'வளர்ச்சி' எனும் அழிவில் இருந்து இமயமலையை காப்பது எப்படி?

    போதுமான புவியியல் ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பே சில்க்யாரா சுரங்கப்பாதையின் பணிகள் தொடங்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சேகர் பதக் தெரிவித்துள்ளார்.

    DW செய்திகளுக்கு அளித்த பேட்டியில் அவர், "ரிஷி-கங்கா மற்றும் தௌலி பள்ளத்தாக்குகளில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளப்படவில்லை." என்றும் அவர் கூறியுள்ளார்.

    இமயமலைப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் இலாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான மக்கள் சங்கத்தின் நிறுவனரான பதக், சுரங்கப்பாதைக்கான மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே எடுக்கப்படவில்லை என்றும், அவசர வெளியேற்ற பாதைகள் குறித்து நன்கு சிந்திக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    சில்க்யாரா சுரங்கப்பாதை திட்டத்தில் ஒரு அவசர வெளியேற்ற பாதை திட்டமிடப்பட்டிருந்தாகவும், ஆனால் அந்த பாதை கட்டப்படவில்லை என்றும் சமீபத்தில் குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

    கியூபா

    பனிப்பாறைகள் உருகுவதால் அதிகரிக்கும் ஆபத்துகள் 

    900 கிலோமீட்டர் நீளம் கொண்ட சார் தாம் பாதையை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கியமான தவறுகள் நடந்துள்ளதாக பல சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இமயமலை பகுதிகளில் இருக்கும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை போல் அல்லாமல், மாறுபட்ட சுற்றுச்சூழலை கொண்டுள்ளது.

    அதனால், இந்தியாவின் பிற பகுதிகளில் கட்டப்படுவது போன்ற கட்டுமானங்கள் இமயமலை பகுதிகளில் கட்டப்பட்டால் அது பெரும் ஆபத்தில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    இது போல, இமயமலையில் நடக்கும் அதிரடி மாற்றங்களால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருக தொடங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக, இமயமலை பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

    டியூவ்

    திட்டத்தை சீக்கிரமாக முடிக்க எடுக்கப்பட்ட சட்ட விரோதமான 'ஷார்ட்கட்டுகள்'

    சார் தாம் யாத்திரை பாதைத் திட்டத்தின் சாத்தியமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேதத்தை மதிப்பிடுவதற்கும், பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் ஒரு உயர்நிலைக் குழுவை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

    மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி சோப்ரா அந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    ஆனால், தங்களது பரிந்துரைகளை சார் தாம் திட்டக்குழு செயல்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், 2022 இல் ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், DW செய்திகளுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், அந்த திட்டத்தை விரைவாக முடிக்க குறுக்குவழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    அந்த "செயல்முறையில், தற்போதுள்ள சட்டங்களை மீறும் குறுக்குவழிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டைத் தவிர்ப்பது குறிப்பாக தீங்கு விளைவிக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    மத்திய அரசு
    சுற்றுச்சூழல்
    காலநிலை மாற்றம்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    உத்தரகாண்ட்

    கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு  இந்தியா
    டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி  பிரதமர் மோடி
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை  தமிழ்நாடு

    மத்திய அரசு

    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு  உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்  டெல்லி
    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு உச்ச நீதிமன்றம்

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! ஆரோக்கியம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு நிதின் கட்காரி
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்

    காலநிலை மாற்றம்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3 சுற்றுச்சூழல் பாதிப்புகள்
    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்தியா
    உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023 பூமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025