
உயிரை பாதுகாக்கும் BSF வீரர்களுக்கு உடைந்த ரயில் பெட்டியா? கொந்தளிக்கும் நெட்டிஸன்கள்
செய்தி முன்னோட்டம்
அமர்நாத் யாத்திரை பணிக்காக ஜம்முவுக்குச் சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களுக்கு, மோசமான நிலையில் ரயில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மூன்று மூத்த பிரிவு பொறியாளர்கள் மற்றும் அலிபுர்துவார் ரயில் பிரிவின் ஒரு பயிற்சி டிப்போ அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
திரிபுராவின் உதய்பூரிலிருந்து ஜம்முவுக்கு BSF அணியை அழைத்துச் செல்ல வேண்டிய ரயிலில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்திருந்தன. மின் விளக்குகள், பேன்கள் செயலிழந்திருந்தன, கழிப்பறைகள் உடைந்து காணப்பட்டன.
இதன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட, இணையவாசிகள் உட்பட பலரும் கொந்தளித்தனர்.
நாட்டை காக்கும் வீரர்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச மரியாதை கூட இந்த அரசிற்கு இல்லையா என கேள்விகள் எழுந்தன.
பயண விவரங்கள்
ரயில் பயணத்திற்கான BSF-ன் குறிப்பிட்ட ஏற்பாடுகள்
இரண்டு ஏசி 2-tier பெட்டிகள், இரண்டு ஏசி 3- tier பெட்டிகள், 16 ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் நான்கு GS/SLR பெட்டிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஏற்பாடுகளை BSF குழு கோரியிருந்தது.
இந்த ரயில் திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள நான்கு இடங்களிலிருந்து துருப்புக்களை ஏற்றிச் செல்ல இருந்தது.
இந்த சம்பவம் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடும் விமர்சனங்களைப் பெற்றது.
"சில ஆடம்பரமான ரயில்களுக்கான பொது போக்குவரத்து வசதியில் அரசாங்கத்தின் முழு கவனமும் இருக்கும்போது இதுதான் நடக்கும்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறினார்.
ரயிலில் மண், கரப்பான் பூச்சிகள் மற்றும் உடைந்த இருக்கைகள் நிறைந்திருந்ததாகவும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியது.
மாற்று ரயில்
துருப்புக்களுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
முதலில் அனுப்பட்ட ரயிலின் தரமற்ற நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட பிறகு, BSF வீரர்களுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில், வைரலான வீடியோவுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அமர்நாத் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையும்.
இந்த யாத்திரைக்காக 581 மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) துருப்புகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது- மொத்தம் சுமார் 42,000 களப் பணியாளர்கள்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
1200 BSF soldiers had to join duty on Amarnath Yatra so that they can provide security to devotees.
— Shantanu (@shaandelhite) June 11, 2025
But, Railways sent a train directly from junkyard for them to travel.
Soldiers refused to board the train by looking the condition.
Look at this train…shame on Ashwini Vaishnav pic.twitter.com/9ckGwsIUWX