NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்
    ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்

    ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2025
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

    இதன் மூலம் யூனியன் பட்ஜெட் 2025 -26 இன்றுடன் தொடங்குகிறது. ஜனாதிபதி தனது உரையில், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைப் பதிவை எடுத்துரைத்து, வரவிருக்கும் பொருளாதார வரைபடத்தை கோடிட்டுக் காட்டினார்.

    "எனது அரசாங்கம் கொள்கை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உறுதியுடன் செயல்பட்டுள்ளது... நாடு முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கைகள் அசாதாரண வேகத்தில் செயல்படுத்தப்படுவதைக் காண்கிறது" என்று முர்மு கூறினார்.

    முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பட்ஜெட் 2047-க்குள் 'விக்சித் பாரத்' அல்லது வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கும் என்று கூட்டத்தொடர் துவங்கும் முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    நிகழ்வுகள்

    இன்று எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகள்

    ஜனாதிபதி முர்முவின் உரைக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனித்தனியாக தாக்கல் செய்வார்.

    சர்ச்சைக்குரிய வக்ஃப் சட்டத்திருத்த மசோதா முதல் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவை தவறாக நிர்வகித்ததாகக் கூறப்படும், நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியதாகக் கூறப்படும் முக்கியப் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தக் கோரும் நிலையில், நடவடிக்கைகள் புயலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியத்துவம்

    "இந்தாண்டின் பட்ஜெட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்"

    பட்ஜெட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

    "குறிப்பாக, நாரி சக்தி மற்றும் பெண்கள் அதிகாரம் மையமாக இருக்கும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை எங்கள் இரண்டாவது மையமாக இருக்கும்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

    நிகழ்ச்சி நிரல் 

    பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் 

    பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும். கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடையும். இரண்டாம் கட்டம் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

    பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இது அவரது எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட்டைக் குறிக்கும்.

    வக்ஃப் (திருத்தம்) மசோதா, வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, ரயில்வே (திருத்தம்) மசோதா உட்பட 16 மசோதாக்களை அரசாங்கம் பரிசீலனைக்கு பட்டியலிட்டுள்ளது.

    மேலும் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, குடியேற்ற சேவைகள் மற்றும் இந்தியாவில் வெளிநாட்டினர் நுழைவது, வெளியேறுவது மற்றும் தங்குவது ஆகியவற்றை இலக்காக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரௌபதி முர்மு
    பட்ஜெட் கூட்டத்தொடர்
    பட்ஜெட் 2025
    குடியரசு தலைவர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திரௌபதி முர்மு

    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா
    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி தமிழ்நாடு
    குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது சென்னை
    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு  எதிர்க்கட்சிகள்

    பட்ஜெட் கூட்டத்தொடர்

    பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? இந்தியா
    பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை முதலீடு
    1 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா  பட்ஜெட் 2024
    இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு விண்வெளி

    பட்ஜெட் 2025

    ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் பட்ஜெட் கூட்டத்தொடர்
    2025 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது பட்ஜெட்
    பட்ஜெட் 2025: Rs.10L வரையிலான ஆண்டு வருமானம் வரி தள்ளுபடி பெறலாம் வருமான வரி அறிவிப்பு
    மத்திய பட்ஜெட்டிற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வின் பாரம்பரியம் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள் பட்ஜெட்

    குடியரசு தலைவர்

    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் சீனா
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025