NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 22, 2025
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் தற்போது 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கேரளாவில் 95 பேர், மஹாராஷ்டிராவில் 56 பேர், கர்நாடகாவில் 13 பேர், புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியள்ளது.

    இந்த நிலையில்தான் சுகாதாரத்துறையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அறிவுறுத்தல்

    தமிழக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் 

    சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான, ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன".

    "இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்." என தெரிவித்துள்ளனர்.

    சென்னை

    சென்னையிலும் பரவும் தொற்று

    சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, சென்னையில் தி.நகர், சின்மயா நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், சமூக பரவலை தவிர்க்க, யாரிடமும் இது குறித்து பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆசியாவில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைதொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கொரோனா
    யுபிஐ செயலியில் பணம் அனுப்பும்போது இந்த அலெர்ட் வருகிறதா? இனி எச்சரிக்கையாக இருக்கலாம்; எப்படினு தெரிஞ்சிக்கோங்க யுபிஐ
    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரக ஊழியர் உட்பட இருவர் சுட்டுக்கொலை அமெரிக்கா
    காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை  ஜம்மு காஷ்மீர்

    கொரோனா

    இந்தியாவில் இதுவரை 819 பேருக்கு JN.1 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்

    கோவிட்

    இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு இந்தியா

    கோவிட் 19

    இந்தியாவில் ஒரே நாளில் 95 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 47 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025