NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்
    வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவிற்கு சிஐடி சம்மன் அனுப்பி இருந்தது

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

    முன்னதாக கடந்த மார்ச் 17ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தாயார் பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து, எடியூரப்பாவை கைது செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவிற்கு சிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில் தற்போது அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவும் தெரிவித்துள்ளார்.

    வழக்கு விவரம்

    எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 354 ஏ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

    எடியூரப்பா மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    பதில்

    எடியூரப்பா, வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று சபதம் 

    81 வயதான எடியூரப்பா, தன் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மேலும் இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ளார்.

    எடியூரப்பா மீது குற்றம் சாட்டிய அந்த பெண் நுரையீரல் புற்றுநோயால் கடந்த மாதம் காலமானார்.

    எனினும் ஏப்ரல் மாதம், CID அவரை தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து குரல் மாதிரியை சேகரித்தது.

    எடியூரப்பா நீதிமன்றத்தில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய நிலையில், இந்த வழக்குக்காக அரசு, சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோக் எச் நாயக்கை நியமித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பாலியல் தொல்லை
    பாலியல் வன்கொடுமை
    கைது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள் பிறந்தநாள்
    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  இந்தியா
    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது கோவா
    கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு  பலாத்காரம்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    கைது

    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது சிறை
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கர்நாடகா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025