லஞ்ச ஒழிப்புத்துறை: செய்தி
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட கரூரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு அடுத்த நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!
முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் புகாரைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரிகள்! பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?
ஹரியானா மாநில அரசின் 'முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0' நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது.
ரூ.5 கோடி ரொக்கம், மெர்சிடிஸ் & 22 சொகுசு கடிகாரங்கள்: ஊழலில் சிக்கிய பஞ்சாப் மாநிலத்தின் DIG
பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சை சேர்ந்த டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் என்பவரை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.