NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது
    போலீசார் RCB மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர்

    பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 06, 2025
    09:14 am

    செய்தி முன்னோட்டம்

    RCB வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீசார் RCB மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர்.

    கூடுதலாக, நிகழ்ச்சி ஏற்பாட்டு அதிகாரிகள் மூவரை கைது செய்துள்ளனர்.

    தவறான நிர்வாகத்திற்கான விமர்சனங்களுக்கு மத்தியில் கர்நாடக அரசு உயர் போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 4 புதன்கிழமை எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

    கைது 

    FIR மற்றும் கைது விவரங்கள்

    Diageo Indiaவின் ஆர்சிபியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் தலைவரான நிகில் சோசலே, மும்பைக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    தனித்தனியாக, வெற்றி கொண்டாட்டங்களின் ஏற்பாட்டாளர்களான DNA என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று ஊழியர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ என அடையாளம் காணப்பட்ட பணியாளர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கூட்ட நெரிசல் தொடர்பான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வந்தது.

    கூடுதலாக ஆர்.சி.பி, நிகழ்வு ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டனர்.

    நெருக்கடி

    கர்நாடக அரசிற்கு அரசியல் நெருக்கடி

    இதற்கிடையில், KSCA செயலாளர் மற்றும் பொருளாளர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த ஏற்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக பெங்களூரு நகர ஆணையர் பி. தயானந்தா உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு இடைநீக்கம் செய்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த நிர்வாகக் குறைபாடு மற்றும் அலட்சியம் காரணமாக கர்நாடக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

    கூட்ட நெரிசல் குறித்து கூறப்பட்ட பிறகும், முதல்வர் சித்தராமையா மைதானத்திற்குள் நிகழ்வில் கலந்து கொண்டு, ஐபிஎல் 2025 வென்ற அணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கைது
    ஆர்சிபி

    சமீபத்திய

    பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது பெங்களூர்
    நிலவு ஆராய்ச்சிக்கு ஏவப்பட்ட ஜப்பானின் Resilience விண்கலம் தோல்வி நிலவு ஆராய்ச்சி
    எப்ஸ்டீன் சர்ச்சை, ஸ்பேஸ்எக்ஸ் முடக்கம்: முற்றுகிறது டிரம்ப் -மஸ்க் மோதல் எலான் மஸ்க்
    தனது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டார் நடிகர் ரவி மோகன் ரவி

    பெங்களூர்

    பெங்களூரு வானத்தை வண்ணமயமாக மாற்றி கடந்து சென்ற வால் நட்சத்திரம் தொழில்நுட்பம்
    பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தின் மீட்டிங் அறைகளுக்கு வினோத பெயர்கள்! காண்க! வணிகம்
    பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை புற்றுநோய்
    பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி வைரல் செய்தி

    கைது

    தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய வாரண்ட்  தென் கொரியா
    ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது சைபர் கிரைம்
    தென் கொரியாவில் ஜனாதிபதியை கைது செய்ய புலனாய்வாளர்கள் முயல்வதால் பதட்டம் தென் கொரியா
    நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது  கேரளா

    ஆர்சிபி

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல்
    RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025