
RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்ததால் நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பியதாகவும், அரசாங்கம் அதை எளிதாக்கியதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார்.
"இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆர்சிபி மற்றும் கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) இந்த விழாவை விரும்பின. நாங்கள் வசதி செய்து தருவதாகக் கூறினோம்," என்று பரமேஸ்வரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சித்தராமையா
முதல்வரும் இதையே பிரதிபலிக்கிறார்; பழிபோடும் அரசியல் துவக்கம்
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, மாநில அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.
"நாங்கள் அல்ல. கொண்டாட்டம் தொடர்பாக ஆர்சிபி மற்றும் கேஎஸ்சிஏவிடம் நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவர்கள் இதை ஏற்பாடு செய்தனர். அரசாங்கம் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அது பெங்களூரு அணி என்பதால், நாங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அவ்வளவுதான். நாங்கள் இதைச் செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் பெங்களூருக்கு கொண்டாட்டங்களுக்காக அணியை அழைத்து வந்தது ஆர்சிபி மற்றும் கேஎஸ்சிஏ தான்," என்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
DK சிவகுமார்
துணை முதல்வர் ஆதங்கம்
பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டிற்காக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கண்டனம் தெரிவித்தார்.
"அவர்கள் மரணப்படுக்கையில் அரசியல் செய்கிறார்கள்... அவர்கள் அதைத்தான் சொன்னார்கள். அவர்கள் ஊர்வலத்தை விரும்பினர். ஊர்வலம் இல்லாமலேயே இது நடந்துள்ளது. ஊர்வலம் நடந்திருந்தால், நிலைமை என்னவாக இருந்திருக்கும்? எல்லோரும் சாலைகளை மறித்து தங்கள் வாகனங்களில் சென்றிருப்பார்கள். நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்று சிவகுமார் கூறினார்.
அதோடு இறந்தவர்களில் பெரும்பான்மையினர் சிறு வயதுடையவர்கள் எனவும், பலரின் பிள்ளைகள் இறந்து போயினர் என நிருபர்களிடம் உடைந்து பேசினார் சிவகுமார்.
இதற்கிடையில், கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது, இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.