NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு
    கூட்ட நெரிசலில் குறைந்தது 8 பேர் இறந்திருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் pc: India today

    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 04, 2025
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வெற்றியாளர்களுக்கு கர்நாடக அரசு நடத்திய பிரமாண்டமான பாராட்டு விழா புதன்கிழமை சோகமாக மாறியது.

    வெறித்தனமான ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் இறந்திருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    18 வருட காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதை முன்னிட்டு விதான சவுதாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கூட்டம் அலைமோதியது.

    விழா தொடங்குவதற்கு முன்பே பரபரப்பு குழப்பமாக மாறியது. நுழைவு வாயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் அணியின் கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க வளாகத்தில் திரண்டதில் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

    குழப்பம்

    கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடியை பயன்படுத்த வேண்டியிருந்தது

    கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க மைதானத்தின் நுழைவு வாயில்களில் கூட்டம் கூடியிருந்தபோது இந்த நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியை பயன்படுத்த வேண்டியிருந்தது.

    காயமடைந்தவர்கள் மருத்துவ உதவிக்காக விரைந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.

    காயமடைந்தவர்கள் உடனடியாக சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    குழப்பம்

    அணிவகுப்புக்காக ரசிகர்கள் வந்தனர்

    கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கூட்டம் "கட்டுப்படுத்த முடியாததாக" இருந்தது என்று கூறினார்.

    மேலும், "அதிகப்படியான கூட்டத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறினார்.

    "நாங்கள் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்பாடு செய்தோம். இது ஒரு இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது ." என்றும் கூறினார்.

    மாலை 5:00 மணிக்குப் பிறகு மைதானத்திலும் அதைச் சுற்றியும் மழை பெய்ததாகக் கூறப்படுகிறது, இது குழப்பத்தை அதிகரித்தது.

    கூட்ட நெரிசலுக்கு முன்பு, ஆர்சிபி வீரர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் பாராட்டினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2025
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    பெங்களூர்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் ஓணம்
    10 ஆண்டுகளில் மில்லியனர் மக்கள் தொகையில் 150% வளர்ச்சி கண்ட பெங்களூர் இந்தியா
    பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு கொலை
    தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு நிர்மலா சீதாராமன்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் குஜராத் டைட்டன்ஸ்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்சிபி: டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளாக முடியாததை சாதிக்குமா ஆர்சிபி? ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025