NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?
    விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது

    இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 15, 2024
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே ஏற்கனவே விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது.

    இது விசா விண்ணப்பதாரர்களிடையே நிச்சயமற்ற தன்மைக்கும், குழப்பத்திற்கும் வழிவகுத்தது.

    இந்தியாவின் இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மத்திய அரசு,"மேலும் நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) கூறியுள்ளது.

    விசா செயல்முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன, மாணவர்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பொறுத்து இந்த ராஜதந்திர மோதல் தீர்மானிக்கப்படும்.

    நேற்றைய சம்பவங்கள்

    நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்தேறிய ராஜதந்திர விவகாரங்கள்

    ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றி, அதன் உயர் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக நேற்று இரவு அறிவித்தது.

    இந்த ஆட்குறைப்பு இரு நாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது.

    கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் கூறப்பட்ட குற்றசாட்டுகள் காரணமாக ஏற்பட்ட விரிசல், நிச்சயம் அனுமதிக்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

    கனடா

    தூதரகங்கள் எண்ணிக்கையை குறைத்த கனடா

    கனடா ஏற்கனவே தனது தூதரகங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் திரும்பப் பெற்றுள்ளது மற்றும் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய முகவர்கள் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து உறவுகள் தளர்ந்த பின்னர், கடந்த செப்டம்பரில் இருந்து அதன் பணிகளில் உள்ள உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

    இந்த குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று கூறிய இந்தியா, பின்னர் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை சுமார் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்தது.

    எனவே, எந்த கனேடிய குடிமகனும் இந்திய விசாவிற்கு மூன்றாம் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியாது.

    விசா சேவை

    பாதிக்கப்பட்ட விசா சேவைகள்

    இந்த விசாக்களில் பெரும்பாலானவை இந்திய வம்சாவளியினர் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க இந்தியாவுக்கு வருவதால், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தவர்களுக்கு கணிசமான கஷ்டங்களை ஏற்படுத்தியது.

    இருப்பினும், செல்லுபடியாகும் வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை அல்லது இந்தியாவிற்கான செல்லுபடியாகும் நீண்ட கால விசாவைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி கனேடியர்கள் பாதிக்கப்படவில்லை.

    நவம்பர் 2023 இல் இந்தியா படிப்படியாக விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது, வணிக மற்றும் மருத்துவ விசாக்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

    விமான சேவை

    நிறுத்தப்பட்ட விமான சேவை

    பெங்களூரு, சண்டிகர் மற்றும் மும்பையில் விசா மற்றும் தனிநபர் தூதரக சேவைகளை கனடா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    அதுமட்டுமின்றி கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவும் கனடாவும் இன்னும் நேரடி விமான இணைப்பை மீண்டும் தொடங்கவில்லை.

    மாணவர் விசா

    மாணவர் விசாவில் கை வைத்த கனடா

    நிரந்தரக் குடியுரிமை, பணி அனுமதி மற்றும் படிப்பு விசாக்களுக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் நிலையில், இந்தியக் குடியேறியவர்களுக்கான முதன்மையான இடங்களில் ஒன்றாக கனடா உள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடா சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு 360,000 ஆகக் குறைத்தது, 2022ல் இருந்து அதை 35% குறைத்தது.

    நாட்டின் சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் 41% இந்திய மாணவர்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை இந்தியாவை மிகவும் பாதித்தது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    விசா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக தேர்தல் முடிவு
    ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO உலக சுகாதார நிறுவனம்
    ரத்தன் டாடா: டாடா குழுமத்தை 5 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்திய தலைவர் டாடா
    ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வழிநடத்தப் போவது யார்? சூடுபிடித்த வாரிசு விவாதம் ரத்தன் டாடா

    கனடா

    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம் பயங்கரவாதம்
    'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர் இந்தியா
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025