NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?
    நிஜார் ஜூன் மாதம் 18ம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?

    எழுதியவர் Srinath r
    Dec 01, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது, அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில், கனேடிய குடிமகன் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, இந்த சம்பவத்துடன் குற்றப்பத்திரிகை தொடர்புபடுத்துகிறது.

    இது நிஜார் கொல்லப்படுவதற்கு முந்தைய நாட்களில், அமெரிக்க அதிகாரிகள் அது பற்றி என்ன அறிந்திருந்தனர் என்பது குறித்த கேள்விகளைத் எழுப்பி உள்ளது.

    ௨ந்ட card

    நிஜாருக்கு இலக்கு வைத்திருந்த நிகில் குத்தா

    கடந்த ஜூன் 18ல் கனடாவில் நிஜார் தனது காரில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, நிகில் குப்தா பார்த்தார். அந்த வீடியோவை தான் கொலை செய்ய பணியமர்த்த முயன்ற நபருக்கு குப்தா பகிர்ந்தார்.

    அதற்கு அடுத்த நாள், அந்த நபருடன் தொலைபேசியில் பேசிய குப்தா, தான் நிஜாருக்கும் இலக்கு வைத்திருந்ததாகவும், அவர் பட்டியலில் மூன்று அல்லது நான்காவது இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

    "எங்களுக்கு பல இலக்குகள் உள்ளன," எனவும், "நல்ல செய்தி இதுதான்: இப்போது காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" எனவும் குப்தா கூறினார்.

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த உரையாடல்கள் புதன்கிழமை அன்று, அமெரிக்க வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.

    அமெரிக்க, குப்தா மீது அமெரிக்க-கனடிய குடிமகனை படுகொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

    ௩ர்ட கார்டு

    குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய சதி

    அந்த குற்றப்பத்திரிகை யாரை கொல்ல குப்தா சதி செய்தார் என தெரிவிக்காத நிலையில், அமெரிக்க ஊடகங்கள் அது சீக்கிய பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் என கூறுகின்றன.

    குர்பத்வந்த் சிங்கை கொல்ல, குப்தா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்க முன் வந்ததாக, அந்த குற்றப்பத்திரிகை கூறியுள்ளது. மேலும், குப்தா கொலை செய்ய பணியமரத்த முயன்ற நபர் ரகசிய பெடரல் அதிகாரி எனவும் தெரிவித்துள்ளது.

    15 பக்க குற்றப்பத்திரிகை, பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் குறித்த தகவல்களையும் வழங்குகிறது.

    ௪த் கார்டு

     ட்ரூடோவின்  குற்றச்சாட்டுகளுக்கு பலம் சேர்க்கும் அமெரிக்க குற்றப்பத்திரிகை

    இந்தியாவில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டது, கனடா நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக பிபிசி கூறுகிறது.

    நிஜாரின் படுகொலை இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" கிடைத்துள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

    இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இவற்றை "அபத்தமானது" எனக் கூறியிருந்தது.

    கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் வலியுறுத்துவதாக ட்ரூடோ புதன்கிழமை கூறினார்.

    அமெரிக்க தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, ட்ரூடோவின் கூற்றுக்கு பலம் சேர்த்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ௫த் கார்டு

    நிகில் குப்தா குறித்து குற்றப்பத்திரிகை கூறுவது என்ன?

    குப்தா இந்திய அதிகாரியால் மே 2023ல் பணியமர்த்தப்படுவதற்கு முன், சர்வதேச ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக, அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    "போர்க் கைவினை"யில் பயிற்சி பெற்ற "மூத்த கள அதிகாரி" என்று தன்னை விவரித்த, இந்திய அரசு ஊழியரின் உத்தரவுகளைப் பின்பற்றி, பல வாரங்களாக குப்தா பன்னூனைக் கண்காணித்து வந்துள்ளார்.

    பன்னூன் கொலை செய்யப்பட்ட பின்னர், "அதிகப்படியான வேலைகள்" வழங்கப்படும் என, குப்தா அந்த அமெரிக்க பெடரல் ஏஜென்டிடம் கூறியதாக குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

    அந்த அதிகப்படியான "வேலைகளில்" எல்லை தாண்டிய செயல்பாடுகளும் அடங்கும். ஜூன் 12ல், குப்தா கனடாவில் "பெரிய இலக்கு" இருப்பதாகக் பெடரல் ஏஜென்டிடம் கூறினார்.

    அதற்கு ஆறு நாட்களுக்கு பின்னர், நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    6th card

    மூன்று கனடா நாட்டவர்களுக்கு குறிவைத்திருந்த குப்தா

    கனடாவில் நிஜார் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்கா தனது குற்றப்பத்திரிக்கையில் யாரையும் குற்றம் சாட்டவில்லை.

    இருப்பினும், குப்தா மற்றும் இந்திய அதிகாரி, நிஜார் கொல்லப்பட்டதற்கு பின்னர் உடனடியாக சந்தித்ததாக கூறுகிறது.

    குற்றப்பத்திரிக்கையின் படி, குப்தா இந்திய அதிகாரியிடம், நிஜாரை தானே கொள்ள விரும்பியதாக கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதற்கு பின்னர் அந்த ரகசிய பெடரல் அதிகாரியை தொலைபேசியில் அழைத்த குப்தா, நிஜார் கொல்லப்பட்ட வீடியோவை பகிர்ந்து, "இந்த வேலையை வேறு யாரோ முடித்து விட்டனர்" என கூறியதாக குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

    நிஜார் கொலை, குப்தாவை தூண்டியதாகவும், பன்னூன் கொலை சீக்கிரம் நடைபெற வேண்டும் எனவும்,

    அதன் பின்னர் ஜூன் மாதத்திற்குள் மூன்று இலக்குகள்- அனைவரும் கனடா நாட்டவர்கள், தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    7th card

    அமெரிக்கா கண்டறிந்ததை கனடாவிற்கு தெரிவித்ததா?

    நிஜார் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

    ஆனால் அந்த எச்சரிக்கையில், அமெரிக்கா ரகசிய நடவடிக்கையின் மூலம் கண்டறிந்த உண்மைகள் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.

    "எப்பிஐ-க்குக் கிடைக்கும் எந்தத் தகவலும் கனேடிய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்காது என்பது மிகவும் சாத்தியமில்லாதது" என சர்வதேச ஆளுகை கண்டுபிடிப்பு மையத்தின் மூத்த நிர்வாகி வெஸ்லி வார்க் பிபிசி இடம் கூறினார்.

    மேலும் இதற்கு காரணமாக, அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தவற்றில், "செயல்படுத்தக்கூடிய உண்மை" மிகக் குறைவாக இருந்திருக்கலாம் எனவும், அதனால் கனடாவிற்கு தெரிவித்து இருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    8th card

    அமெரிக்கா தாக்குதலை முறியடித்த நிலையில், கனடாவால் ஏன் அதை செய்ய முடியவில்லை?

    நிஜாரை காப்பாற்றும் விவகாரத்தில் கனடா அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் கோட்டை விட்டிருக்கலாம் என, இவ்வளவு குறுகிய காலத்தில் கருத முடியாது என வார்க் கூறினார்.

    அமெரிக்க குற்றப்பத்திரிக்கை மற்றும் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இணைத்து பார்க்கும் போது,

    பல கூலிப்படை குழுக்கள் இயங்கி வரலாம் எனவும், அதில் ஒரு குழு கண்டறியப்பட்டு சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருக்கலாம் என வார்க் பிபிசி இடம் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    இந்தியர்கள்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா உலகம்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்திய ராணுவம்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்  ஹரியானா

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025