NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள குவாட் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    09:10 am

    செய்தி முன்னோட்டம்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் குழுவை விரிவாக்குவதன் மூலம் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு குவாட் நாடுகள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

    அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பிடெனின் சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஐநா பாதுகாப்புச் சபையின் விரிவாக்கப்பட்ட பதிப்பில் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    நன்மைக்கான சக்தி

    குவாட் நன்மைக்கான சக்தி: கூட்டு அறிக்கை

    நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குவாட் நன்மைக்கான ஒரு சக்தியாகும் என்றும், மேலும் இது முன்னெப்போதையும் விட மூலோபாய ரீதியாக சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அறிக்கையில் "குவாட் ஒரு தலைவர்-நிலை வடிவமைப்பிற்கு உயர்த்தப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, குவாட் முன்பை விட மிகவும் மூலோபாய ரீதியாக சீரமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தோ-பசிபிக்கிற்கு உண்மையான, நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை வழங்கும் நன்மைக்கான சக்தியாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருப்பது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செழுமையின் இன்றியமையாத அங்கமாகும் என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

    சீனா

    தென்சீனக் கடல் விவகாரம்

    தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகிய இரு பகுதிகளிலும் சீனா பரபரப்பான பிராந்தியப் மோதல்களில் ஈடுபட்டுள்ளது.

    சீனா தென் சீனக் கடல் முழுவதற்கும் இறையாண்மையைக் கோருகிறது. ஆனால், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருனே மற்றும் தைவான் ஆகியவையும் இந்த பகுதிகளில் எதிர் உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன.

    இது குறித்து குவாட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், "ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் வகையில் அப்பகுதியில் சமீபத்திய சட்டவிரோத ஏவுகணை ஏவுதலை நாங்கள் கண்டிக்கிறோம்.

    கடல்சார் களத்தில் சமீபத்திய ஆபத்தான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து நாங்கள் தீவிர கவலை தெரிவிக்கிறோம்." என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    குவாட் உச்சிமாநாடு

    இந்தியாவில் நடக்கவிருந்த குவாட் உச்சிமாநாடு

    இந்த ஆண்டு குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ஜனாதிபதி ஜோ பிடென் தனது சொந்த ஊரில் நிகழ்வை நடத்த ஆர்வமாக இருந்தார்.

    இது அதிபராக அவரது கடைசி ஆண்டு என்பதால், இந்தியாவும் இதற்கு ஒப்புக் கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு குவாட் கூட்டத்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்ரோஷமான நடத்தையை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை குவாட் என்ற கூட்டணியை அமைப்பதற்கான நீண்டகால முன்மொழிவுக்கு 2017இல் வடிவம் கொடுத்தன.

    நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குவாட் சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய அனைவரையும் இந்தோ-பசிபிக் பகுதியை நிலைநிறுத்துவதை ஆதரிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குவாட் குழு
    இந்தியா
    அமெரிக்கா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    குவாட் குழு

    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    இந்தியா

    கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை கேரளா
    வங்கதேச வீரர்களை எதிர்கொள்ள டீம் இந்தியாவின் ஆச்சரியமான திட்டம் இதுதான் வங்கதேச கிரிக்கெட் அணி
    சமூக நீதி நாள்; தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று தமிழ்நாடு
    அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு டெல்லி

    அமெரிக்கா

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல் ஜெனரல் மோட்டார்ஸ்
    ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்; அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் கமலா ஹாரிஸ் கமலா ஹாரிஸ்
    அமெரிக்காவில் திறக்கப்பட்ட 90 அடி உயர ஹனுமான் சிலை; மேலும் சில சுவாரசிய தகவல்கள் உலகம்
    சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பற்றி தெரியுமா? கமலா ஹாரிஸ்

    பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் பங்களாதேஷ்
    ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம் இந்தியா
    இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம் கலைஞர் கருணாநிதி
    பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025