NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்

    எழுதியவர் Srinath r
    Dec 20, 2023
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு, இந்தியாவோ அமெரிக்காவோ காரணமில்லை, பாகிஸ்தான் தான் காரணம் என, சக்தி வாய்ந்த ராணுவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    1993, 1999 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு, நான்காவது முறையாக பிரதமர் பதவிக்கு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் நவாஸ் ஷெரீப் தற்போது போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பிப்ரவரி மாதம் தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட தன் கட்சி சார்பில் விருப்பம் தெரிவித்தவர்களிடம் இடம் ஷெரீப் கலந்துரையாடினார்.

    2nd card

    நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த ஷெரீப் 

    அப்போது பேசியவர், "இன்று பாகிஸ்தான் அடைந்துள்ள நிலைக்கு (பொருளாதாரத்தை குறிப்பிட்டு) இதை இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது ஆப்கானிஸ்தானோ செய்யவில்லை.

    உண்மையில், நாம் நம் காலில் நம்மை நாமே சுட்டுக் கொண்டோம். அவர்கள் (ராணுவத்தை குறிப்பிட்டு) 2018 தேர்தல்களில் மோசடி செய்து, மக்களின் துன்பங்களுக்கும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்த அரசாங்கத்தை இந்த தேசத்தின் திணித்தனர்" என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய ஷெரீப், அந்நாட்டின் நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

    "ராணுவ ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகள் மாலையிடுகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை உடைக்கும் போது நீதிபதிகள் அதை அங்கீகரிக்கிறார்கள்.

    பிரதமர் என்று வரும்போது அவரை நீக்கும் நீதிபதிகள், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அங்கீகாரத்தையும் ஏன் அவர்கள் வழங்குகிறார்கள்" என நீதிபதிகளை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.

    3rd card

    நான்காவது முறையாக பிரதமராக முயற்சிக்கும் ஷெரீப்

    கடந்த நான்கு வருடங்களாக வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஷெரீப், இந்த ஆண்டு அக்டோபரில் நாடு திரும்பினார்.

    ராணுவத்தால் ஆட்சிகள் கலைக்கப்படுவதற்கு பெயர்போன பாகிஸ்தானில், இவர் நான்காவது முறையாக பிரதமராக முயற்சிக்கிறார்.

    நாட்டின் ராணுவம், தேர்தல் ஆணையம் ஷெரீப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில்,

    ஷெரீப் அந்த குற்றச்சாட்டுகளை தற்போது எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(PTI) மேல் வைத்துள்ளார்.

    "1999ல் நான் காலையில் பிரதமராக இருந்தேன், மாலையில் நான் கடத்தல்காரனாக அறிவிக்கப்பட்டேன். அதேபோன்று 2017ல் எனது மகனிடம் சம்பளம் வாங்காததால் நான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்" என்றார்.

    "தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என ராணுவம் இந்த முடிவை எடுத்ததாக ராணுவத்தை விமர்சித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தான் நீதிமன்றம்
    இம்ரான் கான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்? ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் சீனா
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இம்ரான் கான்
    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்

    பாகிஸ்தான் நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025