NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்
    அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. -படம் என்பிசி

    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்

    எழுதியவர் Srinath r
    Nov 13, 2023
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய அவர், "நான் அதைப் பற்றி எவ்வளவு குறைவாகச் சொல்கிறேனோ, அவ்வளவு அதிகமாக அது செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்தார்.

    ஒப்பந்தம் குறித்து அதிகமாக பேசுவது, அதை பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் பிரதமர் நெதன்யாகு சூசகமாக ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளார்.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் தரை வழியாக ஊடுருவிய ஹமாஸ் ஆயுத குழுவினர், 240க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளை பிடித்து சென்றனர்.

    இதில் தற்போது வரை, இஸ்ரேலைச் சேர்ந்த இருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    2nd card

    போர் நிறுத்தம் கோரும் ஹமாஸ், மறுக்கும் இஸ்ரேல்

    போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை பணைய கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய தரைவழி தாக்குதலில் 40 பணைய கைதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    போர் நிறுத்தத்திற்கு இடமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல், போர் நிறுத்தம் 'சரணடைவதற்கு சமமானது' எனவும் தெரிவித்துள்ளது.

    காசா பகுதிக்குள் நிவாரண பொருட்கள் செல்லவும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், போரில் தினசரி 4 மணிநேர இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    இந்நிலையில், பணைய கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பேசியிருப்பதால், போர் நிறுத்தத்திற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    காசா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஹமாஸ்

    மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர் இஸ்ரேல்
    காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் பிரதமர்
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025