NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இப்பிரச்சினை சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால், அது அமெரிக்க-இந்திய உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என, நிகில் குப்தாவின் குற்றப்பத்திரிகை குறித்த அதிபர் பைடன் அரசின் இரகசிய விளக்கத்திற்குப் பிறகு அவர்கள் எச்சரித்தனர்.

    அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று செக் குடியரசு நாட்டில், கடந்த ஜூலை மாதம் குப்தா கைது செய்யப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

    அவர் கைது செய்யப்பட்டதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவரை நாடு கடத்த அமெரிக்கா கோரியிருந்தது.

    2nd card

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைத்ததற்கு இந்தியாவிற்கு பாராட்டு

    நேற்று நடைபெற்ற குற்றப்பத்திரிகை விளக்கத்தில், அமெரிக்க பிரதிநிதிகள் அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் பங்கேற்றனர்.

    "அமெரிக்க-இந்திய உறவுகள் நம் இருவரின் வாழ்விலும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,

    ஆனால் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள், சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால்,

    இந்த மிக முக்கியமான உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்," என விளக்கத்திற்கு பின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தனர்.

    மேலும் இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக இந்தியா குழு அமைத்துள்ளதை வரவேற்றுள்ள அவர்கள்,

    இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இது போன்று மீண்டும் நடக்காததை இந்தியா உறுதி செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    3rd card

    நிகில் குப்தா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

    காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் அமெரிக்காவில் கொலை செய்ய, இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் ஒரு கொலைகாரனை பணியமர்த்த முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

    மேலும், குப்தா இந்திய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவ்வாறு செய்ததாகவும்,

    இந்திய அதிகாரி மற்றும் குப்தா ஆகியோர் டெல்லியில் சந்தித்து இது குறித்து திட்டமிட்டதாகவும், அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை கூறுகிறது.

    குப்தா பணியாமர்த்த முயன்ற நபர் ரகசிய பெடரல் ஏஜென்ட் என்பதால், இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதுகுறித்துகடந்த மாதம் வெளியான தகவல்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக குப்தா தனக்கு வேண்டிய நபர் மூலம், தனது கைதில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    கனடா
    ஜோ பைடன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு பைஜுஸ்
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் இந்தியா

    இந்தியா

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    ரூ.4.1 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'ஏப்ரிலியா RS 457' பைக் ப்ரீமியம் பைக்
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்

    கனடா

    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல் பிரிட்டன்
    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா

    ஜோ பைடன்

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா
    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் அமெரிக்கா
    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025