NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்

    எழுதியவர் Srinath r
    Dec 11, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடங்கிய போர், இரண்டு மாதங்களை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் போராளிகளை சரணடைமாறு இஸ்ரேல் பிரதமர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    "போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்."

    "ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்கிறேன், யஹ்யா சின்வாருக்காக இறக்காதீர்கள். இப்போது சரணடையுங்கள்." என அவர் கூறியிருந்தார்.

    2nd card

    இஸ்ரேல் கூறுவதை மறுக்கும் ஹமாஸ்

    மேலும், கடந்த சில நாட்களில், டஜன் கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் படைகளிடம் சரணடைந்துள்ளனர் என நெதன்யாகு கூறினார்.

    இருப்பினும் இது தொடர்பான ஆதாரங்களை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிடவில்லை. அதே சமயம், போராளிகள் சரணடைவதாக இஸ்ரேல் கூறியுள்ளதை ஹமாஸ் முழுவதுமாக மறுத்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான யோசவ் கல்லன்ட், காசா மீதான தனது கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்துவிட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெறும் கடுமையான போரில், 17,997 பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 240 பேர், பணய கைதிகளாக ஹமாசால் பிடித்துச் சொல்லப்பட்டனர்.

    3rd cad

    பணய கைதிகள் கொல்லப்படுபவர் என ஹமாஸ் எச்சரிக்கை

    காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது, பாலஸ்தீன சிறை கைதிகளின் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை, இஸ்ரேல் நிறைவேற்றாத பட்சத்தில், பணய கைதிகள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா, "பாசிச எதிரியும் அதன் திமிர்பிடித்த தலைமையும்... அல்லது அதன் ஆதரவாளர்களும்...பேச்சுவார்த்தை கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பணய கைதிகளை உயிருடன் மீட்க முடியாது" என தெரிவித்தார்.

    ஹமாஸ் பிடித்துச் சென்ற பணய கைதிகளில் இறந்து போன 20 நபர்களின் உடல்கள அந்த அமைப்பு வைத்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அபு ஒபேடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    காசாவில் இன்னும், 137 பணய கைதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    4th card

    காசாவின் தெற்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

    காசாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தரைவழி தாக்குதலை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை கான் யூனிஸ் நகரத்தின் மையப்பகுதிக்கு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே அறிவிக்கப்பட்ட ஏழு நாட்கள் போர் நிறுத்தம், கடந்த ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், மேலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவான கத்தார் தெரிவித்துள்ளது.

    போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய மத்தியஸ்தராக இருந்த கத்தாரின் பிரதமர்,

    "ஒரு புதிய போர்நிறுத்தத்தைப் பெறுவதற்கு ஒரு "குறுகலான" சாளரம் மட்டுமே இருப்பதாக" கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    பெஞ்சமின் நெதன்யாகு
    பிரதமர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்
    உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு  ஒருநாள் உலகக்கோப்பை
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா

    இஸ்ரேல்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பெஞ்சமின் நெதன்யாகு

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா

    பிரதமர்

    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025