NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
    நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி(வலது), நிஷா பிரியா (இடது).

    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

    எழுதியவர் Srinath r
    Nov 16, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்த வழக்கில், பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா குற்றவாளி என, கடந்த 2018 ஆம் ஆண்டு கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் முயன்று வரும் நிலையில், மரண தண்டனையை ஏமன் அதிபர் மட்டுமே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஏமன் செல்ல அனுமதிகோரி அவரது தாயார் பிரேமா குமாரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    2nd card

    யார் இந்த நிமிஷா பிரியா?

    பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு தனியாக கிளினிக் தொடங்க, ஏமன் நாட்டவரான தலால் அப்தோ என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

    ஏமன் நாட்டு சட்டப்படி, அங்கு தொழில் தொடங்கும் உரிமம் பெற உள்நாட்டு நபரின் உதவி வேண்டும்.

    தலால் அப்தோ, நிமிஷா பிரியாவின் கணவரான டோனியின் நண்பர் ஆவார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு டோனி பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பி விட்டார்.

    நிமிஷா, 2015 ஆம் ஆண்டு தலால் அப்தோ உதவியுடன் கிளினிக் தொடங்கினார். கிளினிக்கில் நல்ல வருமானம் வர, தலால் அப்தோ தன் பங்கை கேட்டு நிமிஷாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    3rd card

    அப்தோவை மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த நிமிஷா

    மேலும் சில தகவல்களின்படி, தலால் அப்தோ நிமிஷா உடன் திருமணமானதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து, அவரை தன் மனைவி என்றும் சொல்லி வந்துள்ளார்.

    போதைப் பழக்கத்திற்கு அடிமையான தலால் அப்தோ, நிமிஷாவை தொடர்ந்து துன்புறுத்தியும், தாக்கியும் வந்துள்ளார்.

    2017 ஆம் ஆண்டு நிமிஷா அளித்த புகாரில், இதே குற்றத்திற்காக தலால் அப்தோ கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த தலால் அப்தோ, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றியதால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

    பாஸ்போர்ட்டை திரும்ப பெறும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு தலால் அப்தோவிற்கு, நிமிஷா மயக்க மருந்து வழங்கியுள்ளார். மயக்க மருந்து அதிகமாகவே தலால் அப்தோ உயிரிழந்தார்.

    4rd card

    கொலை குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்தோ  நிமிஷா

    தலால் அப்தோ உயிரிழந்ததை மறைப்பதற்காக, அப்துல் என்பவருடன் சேர்ந்து அவரது பிணத்தை அகற்றியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவம் வெளியே தெரிய, நான்கு நாட்களுக்குப் பின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஏமன் கிழமை நீதிமன்றம், 2018 ஆம் ஆண்டு நிமிஷாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    தனது தண்டனைக்கு எதிராக நிமிஷா தொடர்ந்து போராடிவரும் நிலையில், அவரின் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    சிறை
    குடியரசு தலைவர்
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொலை

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கைது
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    குடியரசு தலைவர்

    சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள் அமெரிக்கா
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா
    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் அமெரிக்கா
    உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர் சீனா

    டெல்லி

    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025