NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Srinath r
    Oct 27, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்,

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடுகளை பார்த்தால், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் அளவிற்கு நிலைமை உள்ளது"

    "இதை நான் வருத்தத்துடன் சொல்லவில்லை. பெருமையுடன் சொல்லுகிறேன்.இதுதான் திராவிட மாடல்".

    "பெரிய, பெரிய மாளிகையில் வீணான பதவியில் அமர்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, இந்த திருமணமே(சுயமரியாதை திருமணம்) திராவிடம்" என பேசினார்.

    2nd card

    திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்தது திராவிடம்

    மேலும் பேசி முதல்வர், திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததுதான் திராவிடம் என தெரிவித்தார்.

    "கடந்த இரண்டு நாட்களாக அவர் என்ன பொய் பேசி வருகிறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்னை பொறுத்தவரையில் அவரே அப்பதவியில் தொடர வேண்டும். அது நம் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிறது".

    "நான் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன், ஆளுநர் பதவியில் இருந்து இவரை மாற்ற வேண்டாம். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது இவர் தொடர வேண்டும்" என பேசினார்.

    மேலும் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும், நாடாளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு வெளியான கருத்துக்கணிப்புகளை சுட்டிக்காட்டி, திமுக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    3rd card

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி

    தற்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது, ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை வழங்கி இருந்த புகாரில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஆளுநர் மாளிகை முகப்பு முழுவதும் சேதம் அடைந்தது எனவும்,

    ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனவும், தமிழ்நாட்டில் ஆளுநர் அச்சத்தில் பணியாற்றுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை, பெட்ரோல் குண்டு வெடிக்கவே இல்லை எனவும், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் கூறப்பட்டது போல் எதுவும் நடக்கவில்லை எனவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆளுநர் ரவியை தாக்கிப் பேசிய முதல்வர் ஸ்டாலின்

    At an event in Chennai, Tamil Nadu CM MK Stalin says, "For the past two days, you all know what lies he (Tamil Governor RN Ravi) has been peddling. According to me, this person who is peddling lies and asking what is Dravidam should continue being here. That is going to help us.… pic.twitter.com/Mp8W2Q0Jow

    — ANI (@ANI) October 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரதமர்
    அமித்ஷா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை பாஜக
    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி! கிரிக்கெட்
    சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம் மோடி

    பிரதமர்

    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? சந்திரயான் 3
    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி  வாட்ஸ்அப்

    அமித்ஷா

    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா இந்தியா
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு  தமிழக அரசு
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025