
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மழை வரும் 8ம் தேதி வரை தொடரக்கூடும் என IMD கூறியுள்ளது.
எனினும் தமிழகத்தின் சில இடங்களில் இன்று மற்றும் நாளை, இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் விளைவாக, வெப்பமும் காற்றில் ஈரப்பதமும் அதிகரித்து, வெளியில் செல்லும் மக்க்கள் கவனத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பகுதியளவில் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில், மதுரை விமான நிலைய பகுதியில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் (39.4°C) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து வேலூர் மற்றும் திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் (39°C) வெப்பநிலை பதிவானது.
மாநிலம் முழுவதும் 11 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.