NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்

    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Srinath r
    Dec 20, 2023
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

    டெல்லியில் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், உடனடி மீட்பு பணிகளுக்காக ₹7,300 கோடியை கோரினார்.

    "உடனடி நிவாரணத்துக்கு ₹7,300 கோடியும், நிரந்தர நிவாரணத்துக்கு ₹12,000 கோடியும் கேட்டிருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6,000 அறிவித்துள்ளோம். இது விநியோகிக்கப்படுகிறது.

    பிரதமரிடம் இருந்து நிவாரண நிதி கிடைத்தால் தான், நிவாரண பணிகளை முழுமையாக முடிக்க முடியும்," என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    2n card

    வெள்ளத்தில் சிக்கிய 12,553 பேர் மீட்பு

    இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வட தமிழக கரையோர மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை, இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களை வெள்ளக்காடாகியது.

    இந்நிலையில், மீட்பு பணிகள் போர்க்கள அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய முதல்வர், மழை குறித்து வானிலை ஆய்வு மையம் காலதாமதமாக எச்சரித்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும், வெள்ளத்தில் சிக்கிய 12,000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    "12,553 பேர் மீட்கப்பட்டு 143 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    என்னுடன், தலைமைச் செயலாளரும் நிலைமையை கண்காணித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பேசிவருகிறார்" என தெரிவித்தார்.

    3rd card

    மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 8 அமைச்சர்கள்

    பத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், 8 அமைச்சர்களும் களத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 15 குழுக்கள் மற்றும் 10 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மற்ற படைகளுடன் களத்தில் உள்ளன. SDRF மூலம் பயிற்சி பெற்ற சுமார் 230 நபர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருமண மண்டபங்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், 1,545 குடும்பங்களைச் சேர்ந்த, 7,500 தங்கியுள்ளனர்.

    மேலும், 84 படகுகள் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

    மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், (1/2) pic.twitter.com/u0Ezq6El0r

    — TN DIPR (@TNDIPRNEWS) December 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரதமர்
    நரேந்திர மோடி
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பிரதமர் மோடி

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்
    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்  டெல்லி

    பிரதமர்

    கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்
    அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை அமெரிக்கா
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்

    நரேந்திர மோடி

    'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்  இந்தியா
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா இந்தியா

    ஸ்டாலின்

    முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல் வைரமுத்து
    அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு  ஆளுநர் மாளிகை
    எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்  செந்தில் பாலாஜி
    உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025