NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள் 
    உஷார் நிலையில் இருக்குமாறு குறைந்தது 5 மாநில அரசுகள் கேட்டு கொண்டுள்ளன.

    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    09:14 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய்தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்குமாறு குறைந்தது 5 மாநில அரசுகள் கேட்டு கொண்டுள்ளன.

    ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறுகளுடன் வரும் நோயாளிகளைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை உறுதி செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

    பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    பருவகால காய்ச்சலின் அறிகுறிகள், ஆபத்து காரணிகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகிவற்றையும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.

    டக்லவ்க்ம்

    உஷார் நிலையில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரகாண்ட்

    நிலைமை "தற்போது கவலைக்கிடமாக இல்லை", ஆனால் மருத்துவ ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குழந்தைகள் பிரிவு மற்றும் மருத்துவப் பிரிவுகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் அரசு கேட்டு கொண்டுள்ளது.

    குஜராத்தில், சீனாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட்-19யின் போது உருவாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள் தங்கள் தயார்நிலையை உறுதி செய்யுமாறு குஜராத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    உத்தரகாண்டின் சாமோலி, உத்தர்காஷி மற்றும் பித்தோராகர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இந்திய-சீன எல்லையில் உள்ளதால், உத்தரகாண்ட் அரசு, சுவாசக் கோளாறுகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    தமிழ்நாடு
    கர்நாடகா
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சீனா

    சீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா அமெரிக்கா
    தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல் பிலிப்பைன்ஸ்
    புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்  மெர்சிடீஸ்-பென்ஸ்

    தமிழ்நாடு

    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி
    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழக அரசு
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    கர்நாடகா

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் விவசாயிகள்
    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம் டெல்லி
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் பாஜக

    ராஜஸ்தான்

    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025