Page Loader
போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
POCSO வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2025
07:26 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இவ்வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் பிபி. வரலே ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அவர்கள் கூறியதாவது: "போக்சோ வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் அதன் தீவிரத்தையும் சமூக தாக்கத்தையும் முழுமையாக உணர வேண்டிய தேவை உள்ளது. போக்சோ வழக்குகளுக்காக தனி நீதிமன்றங்களை அமைத்தல் அவசியமாகியுள்ளது. இவ்வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் விசாரணை சட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற வேண்டும்."*

 நிலைமை

மாநிலங்களில் நிலவும் நிலைமை

மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ள போதிலும், தமிழகம், பீஹார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், மேலதிக போக்சோ நீதிமன்றங்கள் அவசியமாக தேவைப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்குகளின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளின் நலன் குறித்து நீதிமன்றம் வலியுறுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு இயலுமெனும் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post