NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
    தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங் கொடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

    தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 09, 2024
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

    இந்நிலையில், திங்கட்கிழமை, சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து புதிய எச்சரிக்கையை தமிழக துறைமுகங்களுக்கு வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, செப்டம்பர் 9 ஆம் தேதி வடமேற்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.

    முன்னறிவிப்பு

    வானிலை முன்னறிவிப்பு

    பூரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 50கிமீ தொலைவில் (ஒடிசா), பாரதீப்பில் இருந்து 90கிமீ தென்மேற்கே (ஒடிசா), கோபால்பூருக்கு கிழக்கு-வடகிழக்கே 140கிமீ தொலைவில் (ஒடிசா), 140கிமீ தென்-தென்மேற்கில் சந்த்பாலி (ஒடிசா), 260கிமீ கிழக்கு கிழக்கு கலிங்கப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் திகாவின் (மேற்கு வங்கம்) தென்-தென்மேற்கில் 260கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    இது கிட்டத்தட்ட வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் பூரி அருகே ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு நோக்கி ஒடிசா முழுவதும் நகர்ந்து, மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.

    பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் சத்தீஸ்கர் முழுவதும் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

    புயல் எச்சரிக்கை

    புயல் எச்சரிக்கைக் கூண்டு

    இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை ஏற்றுவதற்கான அறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை வைத்திருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதே நேரம், சென்னை, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுவதோடு, இரண்டு மற்றும் ஒன்றாம் எண்ணுக்கான செக்க்ஷன் சிக்னலையும் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, ஆந்திராவில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    வானிலை ஆய்வு மையம் அறிக்கை

    pic.twitter.com/q7Uoh30eKJ

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    தமிழகம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    வானிலை ஆய்வு மையம்

    வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி இந்தியா
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    ஒரே நாளில் அதிக மழை பெய்தால் 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது பெங்களூரு  பெங்களூர்

    தமிழகம்

    தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை சுங்கச்சாவடி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வானிலை அறிக்கை

    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகம்
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    ரீமால் புயல்: 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் உருவான புயல்; தமிழகத்திற்கு பாதிப்பா? புயல் எச்சரிக்கை
    ரீமால் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் புயல் எச்சரிக்கை
    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகம்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025