NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
    ராமேஸ்வரம் தீவினை நிலத்தோடு இணைக்கும் பாம்பன் ரயில் பாலம்

    புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 12, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ராமேஸ்வரம் தீவினை நிலத்தோடு இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

    மிகவும் பிரபலமான இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.

    எனினும் கடல் மண் அரிப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பழைய பாலம் வலு இழந்து தொடர்ந்து சேதம் அடைந்து வந்தது.

    இதனால், ரயில் சேவை தொடர முடியவில்லை.

    இந்த நிலையில், பிரதமர் மோடியின் கீழ் உள்ள மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய ரயில் பாலம் கட்டும் திட்டத்தை 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

    சிறப்பம்சங்கள்

    பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் 

    2021 செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், கடல் சீற்றம், வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில், கடந்த மாதம் புதிய பாம்பன் பாலத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

    புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். இதில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் மற்றும் 101 தூண்கள் உள்ளன. இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதன்மை தூக்குப்பாலமாக உருவாகியிருக்கிறது.

    இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch : பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் ட்ரோன் காட்சி

    A drone view of Load deflection test on the New #Pamban Bridge@GMSRailway #railway #train #viral #reels #trending pic.twitter.com/O9hdvXiBkt

    — Anbil ChinnaThambi (@AnbilChinna) August 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமேஸ்வரம்
    பிரதமர் மோடி
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இலங்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு

    பிரதமர் மோடி

    எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்? எலான் மஸ்க்
    'நவீன நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக': மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி பட்ஜெட் 2024
    கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்  லடாக்
    பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் இந்தியா

    ரயில்கள்

    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்  சென்னை
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்
    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து திருச்செந்தூர்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025