NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

    பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 13, 2025
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தைப்பொங்கல் திருநாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாட்டுப் பொங்கலன்று, தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    மீனவர்கள்

    மீனவர்களுக்காக எச்சரிக்கை

    ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மற்றும் உள்பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மீனவர்களைப் பொறுத்தவரை வங்காள விரிகுடா, அரபிக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 35-55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்த காலகட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கனமழை

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?  வானிலை அறிக்கை
    மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை வானிலை ஆய்வு மையம்
    டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை
    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை

    வானிலை அறிக்கை

    தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
    வளிமண்டல சுழற்சியால் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே வானிலை எச்சரிக்கை

    வானிலை எச்சரிக்கை

    இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    126 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த வெப்பநிலை; ஜப்பானுக்கு இப்படியொரு நிலைமையா? ஜப்பான்
    காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதில் தாமதம்; தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை காற்றழுத்த தாழ்வு நிலை
    தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு தஞ்சாவூர்

    வானிலை எச்சரிக்கை

    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு மழை
    வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை
    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025