NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்

    நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.

    மூன்றாவது முறையாக NDA கூட்டணி அரசு அமைத்த பிறகு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று இரு அவைகள் சேர்ந்த கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவரின் உரையினை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்களால் விவாதிக்கப்படும்.

    18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடந்த திங்களன்று துவங்கியது.

    அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதவிபிரமாணம் மேற்கொண்டனர்.

    பின்னர், சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

    சபாநாயகர் தேர்தல்

    நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தல் 

    நேற்று அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது.

    அதில் NDA கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வானார்.

    அவரை ஆளும் கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்தி, சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.

    ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியில், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும் சபாநாயகராக, மக்களவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் மக்களின் குரலின் இறுதி நடுவர் பிர்லா என்றும் கூறினார்.

    அவைக்கு நன்றி தெரிவித்த ஓம் பிர்லா, நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றுவதாகவும், வரவிருக்கும் அமர்வுகளில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நம்புவதாகவும் கூறினார்.

    அவசரநிலை

    'இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயம்...': பிர்லா அவசரநிலை

    எமர்ஜென்சி பற்றி பேசிய பிர்லா, "1975ல் எமர்ஜென்சியை அமல்படுத்தும் முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதனுடன், எமர்ஜென்சியை எதிர்த்த அனைவரின் மன உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்... அத்தியாயம்... இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கினார்" என தெரிவித்தார்.

    சபாநாயகர் அறிக்கையை வாசித்ததையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டது.

    "அவசரகாலத்தின் இருண்ட நாட்கள்" என்று அவர் குறிப்பிட்டது எதிர்க்கட்சியினரிடம் இருந்து சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது வியாழன் வரை (இன்று) அமர்வை ஒத்திவைக்க வழிவகுத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    குடியரசு தலைவர்
    திரௌபதி முர்மு
    பிரதமர்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    நாடாளுமன்றம்

    துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார் டெல்லி
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கர்நாடகா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை

    குடியரசு தலைவர்

    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா
    நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல் போர்ச்சுகல்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா

    பிரதமர்

    நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார் நியூசிலாந்து
    மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள் மலையாள திரையுலகம்
    இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம் இலங்கை
    பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பெயர் பரிந்துரைப்பு பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025