Page Loader
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
#Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன" என பிரதமர் தெரிவித்துள்ளார்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2024
11:19 am

செய்தி முன்னோட்டம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். 1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கான காங்கிரஸின் முடிவு குறித்து அவர் பேசி ஒருநாள் கழித்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது,"சொல்லும் பேச்சும் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலன்களைக் காக்க, திமுக எதுவும் செய்யவில்லை. #Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன" என தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி, இலங்கைக்கு கச்சத்தீவை ஒப்படைத்ததற்காக காங்கிரஸைத் தாக்கியது மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை இந்த முடிவு பலவீனப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

வெளியான RTI அறிக்கை

புயலை கிளப்பும் கச்சத்தீவு விவகாரம்

1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி ஒப்படைத்தது என்பதை வெளிப்படுத்திய தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமரின் கருத்துக்கள் வந்துள்ளன. "காங்கிரஸும், திமுகவும் குடும்ப அலகுகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அலட்சியம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களைப் பாதிக்கிறது" "தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் இடம் கச்சத்தீவு. ஆனால் அவர்கள் தீவை அடைய சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியவுடன் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்"என்று அவர் மேலும் கூறினார்.

ஜெய்சங்கர் முன்வைத்த குற்றசாட்டு

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்வைத்த குற்றசாட்டு

"கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி விட்டுக்கொடுத்தது என்பதை புதிய உண்மைகளை அந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்தியுள்ளது - காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது! இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது காங்கிரஸின் செயல்முறை" என்று பிரதமர் ட்வீட் செய்தார். திங்களன்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸை விமர்சித்தார். இரு கட்சிகளும் "இந்த விஷயத்திற்கு தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன" என்று கூறினார். ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 1,175 இந்திய மீன்பிடி கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டன, தடுத்து வைக்கப்பட்டுள்ளன அல்லது கைது செய்யப்பட்டுள்ளன. இதுதான் பிரச்சினையின் பின்னணி"எனத்தெரிவித்தார்.