NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
    #Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன" என பிரதமர் தெரிவித்துள்ளார்

    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

    1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கான காங்கிரஸின் முடிவு குறித்து அவர் பேசி ஒருநாள் கழித்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது,"சொல்லும் பேச்சும் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலன்களைக் காக்க, திமுக எதுவும் செய்யவில்லை. #Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன" என தெரிவித்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி, இலங்கைக்கு கச்சத்தீவை ஒப்படைத்ததற்காக காங்கிரஸைத் தாக்கியது மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை இந்த முடிவு பலவீனப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    வெளியான RTI அறிக்கை

    புயலை கிளப்பும் கச்சத்தீவு விவகாரம்

    1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி ஒப்படைத்தது என்பதை வெளிப்படுத்திய தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமரின் கருத்துக்கள் வந்துள்ளன.

    "காங்கிரஸும், திமுகவும் குடும்ப அலகுகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அலட்சியம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களைப் பாதிக்கிறது"

    "தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் இடம் கச்சத்தீவு. ஆனால் அவர்கள் தீவை அடைய சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியவுடன் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்"என்று அவர் மேலும் கூறினார்.

    ஜெய்சங்கர் முன்வைத்த குற்றசாட்டு

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்வைத்த குற்றசாட்டு

    "கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி விட்டுக்கொடுத்தது என்பதை புதிய உண்மைகளை அந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்தியுள்ளது - காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது! இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது காங்கிரஸின் செயல்முறை" என்று பிரதமர் ட்வீட் செய்தார்.

    திங்களன்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸை விமர்சித்தார்.

    இரு கட்சிகளும் "இந்த விஷயத்திற்கு தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன" என்று கூறினார்.

    ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 1,175 இந்திய மீன்பிடி கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டன, தடுத்து வைக்கப்பட்டுள்ளன அல்லது கைது செய்யப்பட்டுள்ளன. இதுதான் பிரச்சினையின் பின்னணி"எனத்தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    பிரதமர்

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் குடியரசு தினம்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி  தமிழகம்
    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல் கனடா

    பிரதமர் மோடி

    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி இந்தியா
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர்
    ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார் ககன்யான்

    நரேந்திர மோடி

    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா
    7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025