NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது

    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

    இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் அருகேயுள்ள வத்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்னும் காரணத்தினால் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் இருந்த நிலையில் பெரும்பாலானோர் அதில் தமிழ் மற்றும் ஹிந்தி பேசக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில், வத்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அந்த விமானத்தில் ஆள் கடத்தல் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் பேரில், பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளை தரையிறக்கி அவர்களது ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.

    கடத்தல் 

    சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை 

    அதில் 11 சிறுவர்கள் பெற்றோர்-உறவினர் துணையின்றி தனியாக பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

    மேலும் 5 சிறுவர்கள் உள்பட 20 பேர் பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய தூதரக அதிகாரிகளும் அங்கு விரைந்து பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    விமான பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமான நிலையத்தில் இருந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அனுமதி 

    இன்று அதிகாலை 4 மணியளவில் மும்பை வந்தடைந்த விமானம் 

    இதனை தொடர்ந்து விமான பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

    பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட நீதிபதிகள் அனுமதி வழங்கிய நிலையில், அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் 276 பயணிகளுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

    இதற்கிடையே புகலிடம் கேட்ட 25 பேர் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    விமான நிலையம்
    விமானம்
    பிரான்ஸ்

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    மும்பை

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர் வைரல் செய்தி
    INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை  இந்தியா

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    விமானம்

    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா

    பிரான்ஸ்

    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023 திருவிழா
    கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025