NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த வார தொடக்கத்தில் அதே நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காவல் காலத்தின் முடிவில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அவரை ஆஜர்படுத்தியது.

    காவல்துறை வாதங்களை கேட்ட நீதிபதி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி டாக்டர் ஹர்தீப் கவுர், லலிதின் நீதிமன்ற காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சந்தித்து, சதி திட்டத்தை தீட்டியதாக லலித் ஜா காவல்துறையிடம் தெரிவித்ததாக, அவர்கள் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

    2nd card

    விசாரணையில் லலித் குறித்து இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள்

    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவது மூலம், தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம் என நினைத்து, அவர்கள் இவ்வாறு செய்ததாக, விசாரணையில் லலித் கூறியுள்ளார்.

    இந்த குற்றத்தை மறைப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைபேசிகளையும் வாங்கி லலித் அழித்ததாகவும், ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி வரும் வழியில் தனது கைபேசியையும் அழித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சில தகவல்களின்படி, நாடாளுமன்ற தாக்குதலுக்கான திட்டத்தை பல மாதங்களாக லலித் தீட்டி வந்ததாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழைய பாஸ் வேண்டும் என்பதால், அதை பெற முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்தபடி லலித், தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிகள் மூலம், நாட்டில் நடந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் போலீஸ் நடமாட்டங்களை கண்காணித்து வந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்ற அத்துமீறல்
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    நாடாளுமன்ற அத்துமீறல்

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி

    டெல்லி

    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார் இயக்குனர்

    காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்  கோவை
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்  பெங்களூர்
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் ஜம்மு காஷ்மீர்
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம் எம்பிபிஎஸ்

    காவல்துறை

    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  பீகார்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025