Page Loader
Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2025
04:14 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரில், இரண்டு பயங்கரவாதிகளும் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள். 2023 ஆம் ஆண்டு லஷ்கரில் இணைந்த குட்டாய், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியானில் உள்ள ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரைக் கொன்றதிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் கெல்லர்

உளவு செய்தியின் படி உரிய நடவடிக்கை எடுத்த ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்

இது பற்றி ராணுவத்தின் அதிகாரபூர்வ X பக்கம் வெளியிட்ட அறிக்கைப்படி, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவிலிருந்து "குறிப்பிட்ட உளவுத்துறை" தகவல் கிடைத்ததை அடுத்து, இராணுவம் ஆபரேஷன் கெல்லரைத் தொடங்கியது எனக்கூறியது. "இந்த நடவடிக்கையின் போது, ​​பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று இராணுவம் X இல் எழுதியது. எனினும் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் கூறியுள்ளது. ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தேடுதல்

பஹல்கம் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் ராணுவம் 

இதற்கிடையே, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் என்று நம்பப்படும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மூன்று பயங்கரவாதிகளான அதில் உசேன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு, 'பயங்கரவாதமற்ற காஷ்மீர்' என குறிப்பிட்டு, சுவரொட்டிகளை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் ஒட்டியுள்ளன. ஷோபியன் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவர்களைபற்றி நம்பகமான தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.