NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?
    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி(NCR) மோசமான காற்று மாசுபாட்டுடன் போராடி வருகிறது.

    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

    ஆனால், இந்தியாவில் பட்டாசுகள் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று பட்டாசுகளுக்கு தடை விதித்தது.

    நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ராஜஸ்தானில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை நேற்று விசாரித்த போது, இந்த தடையை அறிவித்தது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றம் எந்த வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

    டிக்க்வ்ழ்ந்

    அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

    இல்லை, அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பேரியம் உப்புகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை தவிர மற்ற பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது.

    ஹசிபிகேவ்

    பசுமை பட்டாசுகள் என்றால் என்ன?

    சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கமால் தீபாவளியை பட்டாசுகளுடன் கொண்டாடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த பசுமை பட்டாசுகள்.

    லித்தியம், ஆர்சனிக் மற்றும் பேரியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் இல்லாத பட்டாசுகள் பசுமை பட்டாசுகள் என்று அழைக்கப்படுகின்றன.

    இது போன்ற பட்டாசுகளில் அலுமினியம், ஈயம் மற்றும் கார்பன் போன்ற இரசாயனங்கள் இருந்தாலும், அவை வழக்கமான பட்டாசுகளில் இருப்பதை விட குறைந்த அளவிலேயே உள்ளன.

    பசுமை பட்டாசுகள் வெடிக்கும் போது பொதுவாக நீராவி வெளியாகும். அப்படி வெளியாகும் நீராவி, பட்டாசுகளில் இருந்து வெளியேறும் தூசிகளை காற்றில் கலக்கவிடாமல் அடக்குகிறது.

    அதனால், காற்று மாசுபாடுவதும் தடுக்கப்படுகிறது.

    டவ்க்ஜ்க

    டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை

    2024 ஜனவரி 1-ம் தேதி வரை தேசிய தலைநகர் பகுதியில்(NCR) அனைத்து வகையான பட்டாசுகளையும் பயன்படுத்த கடந்த மாதம் டெல்லி அரசு தடை விதித்தது.

    பட்டாசுகளை தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய்தல், ஆன்லைன் டெலிவரி செய்தல், வெடிக்க செய்தல் ஆகியவை டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளது.

    பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் இந்த தடை பொருந்தும்.

    "கடுமையான" காற்று மாசுபாடு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியை(NCR) சூழ்ந்துள்ளதால், பட்டாசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டாம் என்று காவல்துறைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    ட்ஜ்கவ்ழ்ந்

    பிற மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் 

    பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தீபாவளியன்று இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புப் படையை கர்நாடகாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சகஜபி

    பீகாரில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை

    மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், பீகார் அரசு பட்டாசுகளுக்கு முழு தடை விதித்துள்ளது.

    காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், பாட்னா, கயா, முசாபர்பூர் மற்றும் ஹாஜிபூர் ஆகிய நான்கு நகரங்களிலும்(பச்சை பட்டாசுகள் உட்பட) பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் நிர்வாகம் முழு தடை விதித்துள்ளது.

    பீகார் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கஜ்வ்க்

    இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காற்று மாசு

    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி(NCR) மோசமான காற்று மாசுபாட்டுடன் போராடி வருகிறது.

    டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 418 ஆக பதிவாகியுள்ளது.

    நொய்டா, குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பிற நகரங்களின் நிலைமையும் மிகவும் மோசமாகியுள்ளது.

    கடந்த வாரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக அறிமுகமான மும்பையிலும் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது.

    மும்பையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 165ஆக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    தீபாவளி 2023
    காற்று மாசுபாடு
    பட்டாசுகள்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா? தீபாவளி
    விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள் தீபாவளி

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    பட்டாசுகள்

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025