NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 
    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது

    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 

    எழுதியவர் Nivetha P
    Nov 02, 2023
    11:49 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    விபத்துகள் ஏற்பட முக்கிய காரணியாக இருப்பது அதிவேகம் என்பதால் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை நிர்ணயம் செய்தது.

    வேகம் 

    வாகனங்களின் வேகத்தை கண்டறியும் நவீன கருவி 

    இதற்காக 30 நவீன 'ஸ்பீடு ரேடார் கன்' வாங்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை, மதுரவாயல், அண்ணாசாலை, சென்ட்ரல், போன்ற இடங்களில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சென்னையில் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை அனைத்து வாகனங்களும் 40கிமீ.,வேகத்திலும், இரவு 10 மணிக்குமேல் 50கிமீ.,வேகத்திலும் செல்ல வேண்டும்.

    இதனை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அரசு 

    கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க 6 பேர் கொண்ட குழு

    ஆனால் இந்த கட்டுப்பாடு அசாத்தியமானது, நடைமுறைக்கு சரிவராது என்று பல விமர்சனங்கள் எழுந்ததாக தெரிகிறது.

    இதனால் சென்னை பெருநகரின் கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இந்த கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வினை நடத்தினர்.

    டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வாகங்களுக்கான வேக கட்டுப்பாடுகளோடு ஒப்பிட்டு பார்த்து இந்த ஆய்வானது நடந்தது.

    அதன் முடிவில், தற்போது இக்குழு புதிய வேக கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்துள்ளது.

    அபராதம் 

    குடியிருப்பு பகுதிகளில் செல்லும் வாகனங்கள் 30கிமீ.,வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது

    இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் மினிவேன், கார் போன்ற வாகனங்கள் மணிக்கு 60கிமீ.,வேகத்திலும்,

    லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50கிமீ.,வேகத்திலும்,

    ஆட்டோக்கள் 40கிமீ.,வேகத்திலும் செல்லலாம்.

    குடியிருப்பு பகுதிகளில் செல்லும் போது அனைத்து வாகனங்களும் 30கிமீ.,வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.

    ரூ.1,000

    விதிகளை பின்பற்றினால் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளலாம்.

    மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

    போக்குவரத்து விதிகள் முறையாக பொதுமக்களால் பின்பற்றப்படும் பட்சத்தில் பாதுகாப்பான பயணத்தினை அனைவரும் மேற்கொள்ளலாம்.

    விபத்துகள் உள்ளிட்ட துயர் சம்பவங்கள் நேராமல் தடுக்கவும் இது அமையும் என்று கூறப்படுகிறது.

    மேலும், இந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் பரீதாபாத்தில் உள்ள ஐ.ஆர்.டி.இ. என்னும் கல்வி நிறுவனம், சென்னையிலுள்ள ஐஐடி ஆகியவற்றின் பேராசிரியர்களின் அறிவுரைகளின் படியும் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    விபத்து
    போக்குவரத்து விதிகள்
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சென்னை

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை  சிறை
    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு  இஸ்ரேல்

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025