NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 
    இதற்கான அதிகாரபூர்வ கோரிக்கை செவ்வாய்கிழமை அன்று முறையாகப் பெறப்பட்டது

    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 23, 2024
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.

    இதற்கான அதிகாரபூர்வ கோரிக்கை செவ்வாய்கிழமை அன்று முறையாகப் பெறப்பட்டது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1967ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.

    எனினும் இந்த செயல்முறையின் காலஅளவு தெளிவாக இல்லை.

    மே 2 அன்று, அவர் தனது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு பயணம் செய்ததை MEA உறுதிப்படுத்தியது. ஆனால் அவரது விசாவை எளிதாக்குவதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.

    அரசு நடவடிக்கை

    ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மத்திய அரசை கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது

    அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பாஸ்போர்ட் சட்டத்தின்படி, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மட்டுமே பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடியும்.

    ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

    முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடாவின் பேரன்—சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் ஹாசனில் போட்டியிட்டவர்— கிரிமினல் மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது.முன்னதாக, எஸ்ஐடி லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. அதே நேரத்தில் இன்டர்போல் எஸ்ஐடியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எம்பியின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் கோரி "ப்ளூ கார்னர் நோட்டீஸ்" வெளியிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் தொல்லை
    பாலியல் வன்கொடுமை
    கர்நாடகா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    கர்நாடகா

    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு காங்கிரஸ்
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  சித்தராமையா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் பெங்களூர்
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு பெங்களூர்

    வெளியுறவுத்துறை

    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர்  கனடா
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025