NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 
    டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 05, 2024
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

    மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறித்த காலக்கெடுவுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.

    போராட்ட விவரங்கள்

    'மருத்துவமனை பாதுகாப்பை மேம்படுத்த அரசு தவறிவிட்டது'

    கொல்கத்தாவின் பிரபல Esplanade இல் போராட்டம் நடத்தப்பட்டது, அங்கு ஜூனியர் மருத்துவர் பரிசய் பாண்டா, மருத்துவமனை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

    "எங்கள் கோரிக்கை எளிமையானது. மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் அளித்துள்ளோம். இருப்பினும், அரசாங்கம் அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று பாண்டா கூறினார்.

    24 மணி நேரத்திற்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சட்ட நடவடிக்கைகள்

    பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்

    இந்த வார தொடக்கத்தில், இந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு மற்றும் நிபுணர்கள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து தேசிய பணிக்குழுவிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    மருத்துவ நிறுவனங்களில் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கவலைகளை ஆய்வு செய்வதற்கும் செயல் திட்டத்தை உருவாக்குவதற்கும் உச்ச நீதிமன்றம் முன்பு ஒரு தேசிய பணிக்குழுவை அமைத்தது.

    பாதுகாப்பு கவலைகள்

    பாதுகாப்பு நடவடிக்கைகளில் மெதுவான முன்னேற்றம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    விசாரணையின் போது, ​​மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், கழிப்பறைகள் கட்டுதல், பயோமெட்ரிக் அமைப்புகள் ஆகியவை தொடர்பாக மேற்கு வங்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் மெதுவான முன்னேற்றம் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

    மேற்கு வங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் திவேதி, வெள்ளம் தாமதத்திற்கு காரணம் என்று கூறினார், ஆனால் அக்டோபர் 15 க்குள் பணிகள் முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    மருத்துவக் கல்லூரி
    பலாத்காரம்
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    கொல்கத்தா

    பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார் மேற்கு வங்காளம்
    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு சவுரவ் கங்குலி
     ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு  பாஜக
    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    மேற்கு வங்காளம்

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை  திரிணாமுல் காங்கிரஸ்
    இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம் குடியுரிமை (திருத்த) சட்டம்
    ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் சந்தேஷ்காலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025