NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்
    ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது

    ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

    புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமான தீவிபத்தால் பீதியடைந்து ரயிலில் இருந்து குதித்தவர்கள் மீது, எதிர் திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதியதில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    விசாரணை

    தீப்பொறி கிளம்பியதாக வதந்தி

    லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ், ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ​​அதன் பெட்டிகளில் ஒன்றில் தீப்பற்றியதாக உண்டான வதந்திகள் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

    ரயிலை நிறுத்த பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்துள்ளனர். எனினும் அவர்களில் பலர் ரயிலில் இருந்து குதித்து, அருகே இருந்த தண்டவளத்தில் இறங்கினார்கள்.

    ஆனால், எதிரே வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

    இருப்பினும், உயர்மட்ட ரயில்வே அதிகாரியை மேற்கோள்காட்டி, ரயில் பெட்டிக்குள் தீப்பொறி அல்லது தீ எதுவும் கவனிக்கப்படவில்லை என செய்தி நிறுவனமான பிடிஐ கூறியது.

    நிவாரணம்

    உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் இரங்கல்

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறு காயங்களுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    விபத்து
    ரயில்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மகாராஷ்டிரா

    ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்  இந்தியா
    அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி? ஐஏஎஸ்
    விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு  புனே
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை  புனே

    விபத்து

    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல் விருதுநகர்
    திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது ரயில்கள்
    மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் மும்பை
    கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம் தூத்துக்குடி

    ரயில்கள்

    வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன? வந்தே பாரத்
    ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசம் குறைப்பு பயணம்
    அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து அசாம்
    தீபாவளி பண்டிகையில் இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025