NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்
    HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார்

    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2025
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    சமூக முன்னேற்றம், பொருளாதாரம் என பல துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நீண்ட காலம் அடிமை விலங்கு பூட்டப்பட்ட பெண்கள், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல், மெதுவாக தங்கள் கட்டுகளை உடைத்துக் கொண்டு, ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில், இந்த நாளில் ஆண்கள் மட்டுமே முன்னிலை வகித்த பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 முக்கியமான பெண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    மருத்துவம்

    ஆண்கள் மருத்துவ கல்லூரியில் படித்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி

    இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் முக்கியமானவர் முத்துலட்சுமி ரெட்டி.

    தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும், அவர் பல சமூக நல செயல்பாடுகளில், பெண்கள் முன்னேற்றத்தில் ஆர்வமாக ஈடுபட்டார்.

    அவ்வாறே, அவர் எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர்.

    முத்துலட்சுமி ரெட்டி, ஆணாதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்தினால் பெரிதும் அறியப்பட்டார்.

    ஆண்கள் கல்லூரியில் அனைவரையும் விஞ்சி தலைசிறந்த மாணவியாக பல பதக்கங்களை வென்றார்.

    மேலும், அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

    அதற்கு அடுத்து, புற்று நோயாளிகளுக்கான நிதி திரட்டி லாப நோக்கற்ற புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை சென்னை அடையாறில் தொடங்கினார்.

    இன்று, ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    பத்திரிக்கைத்துறை

    முதல் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த வி எம் கோதைநாயகி அம்மாள்

    வை.மு.கோ என பிரபலமாக அறியப்படும் வி.எம்.கோதை நாயகி அம்மாளின் சாதனைகள் தமிழ் பத்திரிகைத் துறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

    தமிழ் பத்திரிகைத் துறையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற முதல் பெண் அவர் தான். "ஜெகன் மோகினி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் அவர் இருந்தார்.

    அதோடு கிட்டத்தட்ட 115 புத்தகங்களுக்கு மேல் அவர் எழுதியுள்ளார்.

    இலக்கிய பணியில் தீரா காதல் கொண்டிருந்த அவர் காந்திய வழியில் தனது எழுத்து மூலமாக விடுதலைக்காக போராடியுள்ளார். இதற்காக சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

    அவருடைய எழுதினால் ஈர்க்கப்பட்டு, "ஜெகன் மோகினி" பத்திரிகை, மலேசியா, ரங்கூன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாசிக்கப்படும் முக்கிய பத்திரிகையாக உருவெடுத்தது.

    இவரது எழுத்தால் ஈர்க்கப்பட்ட பல பெண்களுக்கும் பத்திரிகைத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கியவர் இவர்.

    சமூக நீதி

    தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம்

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஆனால், இந்தியாவில் தேவதாசி முறையை ஒழிக்க போராடிய முக்கியமான பெண்களில் அவரும் ஒருவர்.

    சமூக நல ஆர்வலராக, எழுத்தாளராக, மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு கொண்டவராக அறியப்படுபவர் ராமாமிர்தம்.

    பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம், தாசிகளின் மோசமான வாழ்க்கையை விவரிக்கும் "மதி பெற்ற மைனர்" என்ற நாவலை எழுதியுள்ளார்.

    அவரது தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் எழுத்துக்கள் மூலமே, தேவதாசி முறையை ஒழிக்க இயற்றப்பட்ட "மெட்ராஸ் தேவதாசி சட்டம்" உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.

    நிர்வாகம்

    பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நிர்வகிக்கும் இந்திரா நூயி

    இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் 2019 வரை பணியாற்றியவர்.

    இந்திய அமெரிக்க தம்பதிக்கு பிறந்த இந்திரா நூயி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

    தன்னுடைய எம்பிஏ பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்தில் பெற்ற பிறகு, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், பியர்ட்செல் லிமிடெட், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவேரி போன்ற பல முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    1994-இல் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, தன்னுடைய ஓய்வு காலம் வரை அவர் அந்த நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றினார்.

    2017ஆம் ஆண்டு, போர்ப்ஸ் பத்திரிகையின் உலகளாவிய அதிக சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.

    தற்போது அவர் அமேசான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

    தகவல் தொழில்நுட்பம்

    HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார்

    HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முக்கியமான பெண்மணிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தினரான சிவ நாடாரின் மகளான ரோஷினி, தனது தந்தையின் வழியில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

    போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில், ரோஷினி நாடார் மல்கோத்ராவிற்கு 55வது இடம் கிடைத்துள்ளது.

    இது அவரது சாதனைகளை துல்லியமாகப் பிரதிபலிக்கும் மற்றும் தொழிலில் ஆற்றலான பெண் முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சர்வதேச மகளிர் தினம்
    பெண்கள் தினம்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    சர்வதேச மகளிர் தினம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் தமிழ்நாடு

    பெண்கள் தினம்

    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை இந்தியா
    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி காதலர் தினம்
    பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண் சர்வதேச மகளிர் தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025