
தெற்கு தமிழக மாநிலங்களில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 10) முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜூன் 13 முதல் கனமழை பெய்யும் எனக்கூறி, அந்த மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் தகவலின்படி, ஜூன் 10 முதல் தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்துடன், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே ஆகிய பகுதிகளில் ஜூன் 14 வரை தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
ஆரஞ்சு அலெர்ட்
கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலெர்ட்
கர்நாடகா மற்றும் கேரளாவில் ஜூன் 13 முதல் கனமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி, இந்த மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழையுடன் இணைந்து நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பமும் நிலவுகிறது.
மேற்கு ராஜஸ்தானில் ஜூன் 8 முதல் 11 வரை கடுமையான வெப்பஅலை வீசும் எனவும், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்டை தவிர மற்ற வடமேற்கு மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலைகள் தீவிரமாக காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.