NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 26, 2024
    06:30 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி, தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 26) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இன்று சனிக்கிழமை வழக்கமாக அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை இருக்கும் எனும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாணவர்கள்

    மாணவர்களின் பாதுகாப்பு

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    இந்த முன்னறிவிப்புகளை ஏற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேனி, நெல்லை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.

    உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த முன்னெச்சரிக்கையானது கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் மாணவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகள்
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி  டெல்லி
    காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி  டெல்லி
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

    பள்ளிகள்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு அரசு பள்ளி
    ஆல் தி பெஸ்ட்! சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடக்கம் தேர்வு
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்  பொதுத்தேர்வு

    பள்ளி மாணவர்கள்

    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு  காஞ்சிபுரம்
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்  செங்கல்பட்டு
    10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025