Page Loader
கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2024
06:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி, தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 26) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று சனிக்கிழமை வழக்கமாக அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை இருக்கும் எனும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள்

மாணவர்களின் பாதுகாப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த முன்னறிவிப்புகளை ஏற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேனி, நெல்லை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர். உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த முன்னெச்சரிக்கையானது கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் மாணவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.