NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மதுரையில் பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனுடன் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், கிழக்கு திசை காற்று வேகமாறுப்பாடு ஏற்படவுள்ள காரணத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன்படி தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கோயம்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    மழை 

    சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் 

    அதேபோல் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, திருவாரூர், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும்,

    காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நாளையும்(நவ.,10), 11ம்-தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் சிறப்பு வகுப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    மதுரை
    தமிழ்நாடு
    கனமழை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வானிலை ஆய்வு மையம்

    15 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    12 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்  எச்சரிக்கை

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா  தமிழக அரசு
    கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட நூலகத்தின் சிறப்பம்சங்கள்  கருணாநிதி
    மதுரையில் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு  கர்நாடகா
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம் தொழில்நுட்பம்
    12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி

    கனமழை

    தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி தூத்துக்குடி
    கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம் நிலச்சரிவு
    சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி தமிழ்நாடு
    இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன ஹிமாச்சல பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025