NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தில் தற்போது வரை, 1,16,95,973 நபர்கள் ₹10,529.57 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.

    மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

    எழுதியவர் Srinath r
    Nov 08, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.

    இதன் மூலம் 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த மகப்பேறு உதவி திட்ட நிதி, தற்போது 3 தவணைகளாக வழங்கப்படும்.

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நன்மைத் திட்டம்-பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், ₹18,000 (₹14,000 ரொக்கம் மற்றும் ₹4,000 மதிப்புள்ள சத்துணவுப் பொருட்கள்) கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதில் மாநில அரசின் பங்கு ₹15,000 மற்றும் மத்திய அரசின் பங்காக ₹3,000 வழங்கி வந்தது.

    2006ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, 1,16,95,973 நபர்கள் ₹10,529.57 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.

    2nd card

    மகப்பேறு உதவி திட்டத்தில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை

    கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பின், திட்டம் 5 தவணைகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

    முதல் தவணையாக ₹2,000 மூன்றாவது மாத கர்ப்பத்தின் போதும், இரண்டாம் தவணை ₹2,000 நான்காவது மாத கர்ப்பத்தின் போதும்,

    மூன்றாம் கவலையாக பிரசவத்திற்கு பின் ₹4,000, நான்காம் தவணையாக குழந்தைக்கு 3 மாதமாகும் போது ₹4,000,

    ஐந்தாம் தவணையாக குழந்தைக்கு 9 மாதங்கள் ஆகும் போது ₹2,000, மற்றும் ₹4,000 மதிப்பிலான சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    மத்திய, மாநில அரசின் இரு திட்டங்கள் இணைக்கப்பட ஏற்பட்ட காலதாமதமே, கடந்த ஒரு வருடமாக மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படாததற்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தற்போது இப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    3rd card

    மகப்பேறு உதவி திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

    தற்போது 5 தவணைகளுக்கு பதிலாக, 3 தவணைகளாக உதவித்தொகை விடுவிக்கப்படும்.

    அதன்படி, முதல் தவணையாக நான்காவது மாத கர்ப்ப காலத்தின் போது ₹4,000, இரண்டாம் தவணையாக ₹4,000 குழந்தை பிறந்த பின்னும்,

    குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகும் போது, மூன்றாம் தவணையாக ₹6,000 வழங்கப்படும்.

    மேலும் முதல், இரண்டாம் தவணையுடன் சத்துணவு பொருட்களும் வழங்கப்படும்.

    "முன்னதாக, மத்திய அரசின் பங்கான ₹3,000 கிடைத்த பிறகுதான், மாநில அரசின் ₹15,000 உதவித்தொகையை விடுவிக்க முடியும்."

    "தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தில், மத்திய அரசு தனது பங்கை விடுவிக்க தாமதித்தாலும், மாநில அரசு தனது பங்கான ₹15,000 - ₹11,000 ரொக்கம், ₹4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களை வழங்க முடியும்" என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சுகாதாரத் துறை
    மத்திய அரசு
    மாநில அரசு

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    தமிழ்நாடு

    சையத் முஷ்டாக் அலி டிராபி- நாகலாந்தை  73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றது நாகாலாந்து
    தீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது  தீபாவளி
    ஐப்பசி மாத பெளர்ணமி - திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் திருவண்ணாமலை
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி

    சுகாதாரத் துறை

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு

    மத்திய அரசு

    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் குன்னூர்
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025