NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 
    ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 21, 2025
    08:27 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.

    பாகிஸ்தானின் பல தசாப்த கால பயங்கரவாத ஊக்குவிப்பு மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சமாளிப்பதில் இந்தியாவின் புதிய இயல்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் ஆவணங்களுடன் இக்குழு புறப்படும்.

    வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செவ்வாயன்று ஏழு பிரதிநிதிகளில் மூன்று பேருக்கு முக்கியப் பேச்சுப் புள்ளிகள் மற்றும் உலகளாவிய தொடர்புத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    சஞ்சய் ஜா தலைமையிலான குழு மூன்று, சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு நான்கு, திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு 6 ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.

    புறப்பாடு

    ஷிண்டே தலைமையிலான குழு இன்று புறப்படும் 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் ஷிண்டே தலைமையிலான குழு, புதன்கிழமை புதுதில்லியில் இருந்து புறப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    "இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுவோம், ஆனால் யாராவது எங்களைத் தாக்கினால், நாங்கள் அதற்குப் பதிலடி கொடுப்போம். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் மும்முரமாக உள்ளது," என்று ஷிண்டே கூறினார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வதற்காக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா எவ்வாறு புதிய இயல்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, 33 நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை இந்தக் குழு சந்திக்கும்.

    ஆதாரங்கள்

    இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஆவணங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆதாரங்கள்

    பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பெரிய பயங்கரவாதத் தாக்குதல்கள், 2008 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் அழைப்புப் பதிவுகளின் தெளிவான ஆதாரங்களை வழங்கிய பிறகும் இஸ்லாமாபாத் எவ்வாறு செயல்பட மறுத்தது என்பது குறித்து இந்தியக் குழுக்கள் பேசுவார்கள்.

    மேலும் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் மற்றும் 2005 லண்டன் குண்டுவெடிப்பு உட்பட அனைத்து முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்களும் பாகிஸ்தானுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பதை இக்குழுவினர் சுட்டிக்காட்டுவார்கள்.

    எனினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினை ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    இந்தியா

    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு இந்தியா
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா

    இந்திய ராணுவம்

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான் விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025