NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?
    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 14, 2024
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள சூழலில், அக்டோபர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதனால், இன்று முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!#SunNews | #ChennaiRains | #TNRains pic.twitter.com/bgmKYLmWyG

    — Sun News (@sunnewstamil) October 14, 2024

    மழை 

    மழை பெய்யக்கூடிய இடங்கள்

    இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாவது, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு சென்று, வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக சென்னைக்கு, இன்று, அக்டோபர் 14 கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை அக்டோபர் 15, மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் நாளை மறுநாள் அக்டோபர் 16 அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் மழை பாதிக்கக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மழை நிலவரங்களை கண்காணித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டு, தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

    பள்ளி விடுமுறை

    பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்

    இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    "வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஒவ்வொரு மாவட்டங்களில் மழையின் பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. அதன் காரணமாக மழை பாதிப்பினை பொறுத்து அம்மாவட்டங்களின் ஆட்சி தலைவர்கள் பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிவுறுத்தல் பேரில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள்" என அமைச்சர் தெரிவித்தார்.

    மாவட்ட ஆட்சியாளர்களின் அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும், அதற்காக பள்ளிக்கல்வித்துறையும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக அவர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | "பருவமழையின்போது எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்?"

    - கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி#SunNews | #NorthEastMonsoon | #TNRains | #PublicExam | #TNSchools | @Anbil_Mahesh pic.twitter.com/E5FAyfWale

    — Sun News (@sunnewstamil) October 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்க கடல்
    பள்ளிகள்
    கல்லூரி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காற்றழுத்த தாழ்வு நிலை

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! கனமழை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது பள்ளிகளுக்கு விடுமுறை
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை

    வங்க கடல்

    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை

    பள்ளிகள்

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு தமிழகம்
    10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
    பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது: மத்திய அரசு உத்தரவு கல்வி
    சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025