NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள் 
    முக்கால்வாசி நாடுகள் மரண தண்டனையை மொத்தமாக ஒழித்துவிட்டன.

    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 03, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலரும் சமீபகாலமாக குரல் எழுப்பி வருகின்றனர்.

    இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது கலந்துகொண்ட பல வழக்கறிகர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

    அதனையடுத்து, மரண தண்டனை விதிக்கப்படுவதை குறைப்பதற்கும், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க உதவும் காரணிகளின் பட்டியலை விரிவுபடுத்துவதற்கும் புதிய பாதுகாப்புச் சட்டங்களைச் சேர்ப்பதன் அவசியத்தை ஆராய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

    மரண தண்டனைகள் விதிக்கப்படுவதற்கு சில தளர்வுகளை உச்ச நீதிமன்றம் வரையறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிஜிட்வ்க்

    முக்கால்வாசி நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன 

    ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த விவகாரத்தை மேலும் அலசி ஆராய இருக்கும் நிலையில், பெரும்பாலான வழக்கறிஞர்கள் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் அதிகரித்து வருகின்றன.

    இதற்கிடையில், முக்கால்வாசி நாடுகள் மரண தண்டனையை மொத்தமாக ஒழித்துவிட்டன.

    மரண தண்டனையை குறைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவது அவசியம் என்றும், இதற்கு ஒரே மாதிரியான கட்டமைப்புகளை வரையறுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைத் தவிர, பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சட்ட ஆணையமும் கூறியுள்ளது.

    டவ்ட்ஜ்

    மரண தண்டனைக்கு சாதகமாக இருக்கும் இந்திய அரசு 

    தவறாக ஒரு குற்றமற்றவருக்கு மரண தண்டனை விதித்துவிட கூடாது என்பதற்காகவே இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    ஆனால், இந்திய அரசு மரண தண்டனையை ஒழிக்கும் விவாகரத்திற்கு செவி சாய்க்க மறுக்கிறது என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்திய அரசு முன்பு வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தண்டனை சட்டத்திற்கு மாற்றாக முன்மொழியப்பட்ட பாரதீய நியாய சம்ஹிதா(பிஎன்எஸ்) என்ற மசோதாவும் மரண தண்டனைகளை குறைக்காமல் கூட்டியுள்ளது.

    இந்திய தண்டனை சட்டத்தின் படி, மரண தண்டனையை விதிக்கப்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

    ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பாரதீய நியாய சம்ஹிதா மசோதாவில் அது 15ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சட்டம் பேசுவோம்
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  மத்திய அரசு
    ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு  இந்தியா
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    26 வார கருவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் இந்தியா

    இந்தியா

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை உத்தரகாண்ட்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    மத்திய அரசு

    அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி உத்தரப்பிரதேசம்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு பிரதமர் மோடி
    அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி? இந்தியா
    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025