NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்
    பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 20, 2023
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

    அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பங்காரு அடிகளாரின் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதிலிருந்தும் அவரது பக்தர்கள் பலரும் மேல்மருவத்தூர் நோக்கி பயணித்து வருவதாலும், அதிக கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பதாலும், கிட்டத்தட்ட 2000 போலீசார் மேல்மருவத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, நேற்று, மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன், மேல்மருவத்தூருக்கு வந்தார்.

    அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை மேல்மருவத்தூருக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்களும் சென்றனர்.

    card 2

    அன்னதானதிற்கு ஏற்பாடு செய்த அடிகளாரின் தொண்டர்கள்

    பொதுமக்களின் அஞ்சலிக்காக, பங்காரு அடிகளாரின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவதை அடுத்து, ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் நேற்று இரவு முதல் உணவும், குடிநீரும் வழங்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பங்காரு அடிகர்ளின் உடல், பூரண அரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

    அடிகளாரின் மறைவிற்கு, பிரதமர் மோடியும் தனது அஞ்சலி செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    பிரதமர் மோடி, தமிழகம் வந்தபோது, அவரை நேரில் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    ரூ.50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு வரி விலக்கு - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு இலங்கை
    15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்

    தமிழ்நாடு செய்தி

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு ராமநாதபுரம்
    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு மாவட்ட செய்திகள்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை விழுப்புரம்
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை சென்னை

    தமிழகம்

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாடு
    சென்னையில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டெக்னாலஜி அறிமுகம்; விரைவில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த திட்டம்  சென்னை
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு தமிழக அரசு

    முதல் அமைச்சர்

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி
    புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு புதுச்சேரி
    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி ராஜஸ்தான்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025