NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    இந்த திட்டம், 2027-ஆம் ஆண்டில் நிறைவடையும்

    இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 04, 2024
    08:07 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முன்னதாக இது குறித்து, கடந்த 27-ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    அதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

    அந்த கடிதத்தில்,"சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்" என்று கோரினார்.

    இந்த நிலையில் தான், நேற்று பிரதமர் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    விவரங்கள்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் வழித்தடங்கள் என்ன?

    சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது.

    முதற்கட்ட மெட்ரோ ரயில் தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, 2-ஆம் கட்ட திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    இது மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

    அதற்கு காரணம், இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலும், நிதியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில்தான், பிரதமரை முதல்வர் சந்தித்தார்.

    அறிக்கை

    மத்திய அரசின் அறிக்கை 

    இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது.

    ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம், 2027-ஆம் ஆண்டில் நிறைவடையும் எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெட்ரோ
    சென்னை
    மத்திய அரசு
    அமைச்சரவை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    சென்னை

    சென்னை தாம்பரம்- ராமநாதபுரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயில்கள்
    சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு நிர்மலா சீதாராமன்
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயில்கள்
    சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம் ரயில்கள்

    மத்திய அரசு

    மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு இந்தியா
    ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூல்; மத்திய அரசு தகவல் ஜிஎஸ்டி
    விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் விவசாயிகள்
    மொபைல் போன்களுக்கு வருகிறது 'ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ்'; மத்திய அரசு அறிவிப்பு மொபைல்

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025