NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
    மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

    பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2024
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக கடலில் 8 முதல் 12 அடி உயரத்திலான ஆழமான அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால், சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடலில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

    பெங்கல் புயல் காரணமாக கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாகவும், காற்றின் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது.

    மெரினா கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக இருப்பதால் பொதுமக்கள் கடலை ரசிக்க செல்லுவது வழக்கம். ஆனால் தற்போது பெங்கல் புயலின் தாக்கம் காரணமாக, சூறைக்காற்றும் மணலுடன் வீசுவதால் தற்போது கடற்கரைக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ரோந்து பணியில் காவல்துறையினர்

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் கீழ், மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக, அண்ணாசதுக்கம், மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் போலீசாரின் குழுக்கள், ரோந்து வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையைக் கடந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதற்காக 3 காவல் நிலையங்களில் இருந்து தலா 15 போலீசாரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், உயிர் காக்கும் குழு மற்றும் குதிரைப்படை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், அலைகளை காண கடற்கரைக்கு கூடும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெரினா கடற்கரை
    மெரினா
    கடற்கரை
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை

    மெரினா

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தமிழக அரசு
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி  கலைஞர் கருணாநிதி
    விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம் சென்னை

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    புயல் எச்சரிக்கை

    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025