NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
    ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்

    ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 19, 2024
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திராவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.

    தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்க இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

    இதன்படி, வரும் தீபாவளி பண்டிகை முதல், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை மாநில அரசு இலவசமாக வழங்கும்.

    ரேஷன் அட்டை

    இலவச எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கான தகுதி

    இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்திற்கு தகுதி பெற வெள்ளை ரேஷன் கார்டு தேவைப்படும் என தெரிகிறது.

    இந்த அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் பெயரில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும்.

    மங்களகிரியில் உள்ள சிகே மாநாட்டில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்எல்சிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் கலந்து கொண்டனர்.

    இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முதலில் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    எரிவாயு சிலிண்டர்
    தீபாவளி
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    ஆந்திரா

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராய்டு சென்னை சூப்பர் கிங்ஸ்
    அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு  அரசியல் நிகழ்வு
    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா

    எரிவாயு சிலிண்டர்

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  டீசல்
    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு வணிகம்
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு பெட்ரோல்

    தீபாவளி

    ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது இயக்குனர்
    தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட சில குறிப்புகள் தீபாவளி 2023
    தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி  விமான சேவைகள்
    சமையல் குறிப்பு: இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே அதிரசம் செய்து பாருங்கள்  தீபாவளி 2023

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025